tamilnadu

img

கோவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம்

கோவை, ஜூன் 5-  கோவையில் திமுக பிரமுகர்கள் தொடர்ந்து காவல்துறையால் கைது செய் யப்படுவதை கண்டித்தும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் எதேச்சாதிகாரத்தைக் கண்டித்தும் திமுக சார்பில் வெள்ளியன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப் ப்போராட்டத்தில் ஈடுபட்ட சிங்கை சட்ட மன்ற உறுப்பினர் நா.கார்த்திக் உள்ளிட் டோர் கைது செய்யப்பட்டனர்.  கோவை டவுன் ஹாலில் உள்ள மாந கராட்சி அலுவலகம் முன்புறம், ஒருங்கி ணைந்த கோவை மாவட்ட திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் தமி ழக அரசைக் கண்டித்தும், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியை கண்டித்தும், காவல்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட் டத்தில், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப் பினர் பி.நாச்சிமுத்து, சட்டத்துறை இணைச் செயலாளர் வழக்கறிஞர் கே.எம்.தண்ட பாணி, பகுதிக் கழகச் செயலாளர் மார்க்கெட் எம்.மனோகரன், வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் பி.ஆர்.அருள்மொழி ஆகியோர் பங்கேற்று காவல்துறையால் கைது செய்யப்பட்டனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் திமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கைதாகினர்.