tamilnadu

img

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

 திருப்பூர், பிப். 12- திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங் கில், புதனன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.க.விஜய கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. திருப்பூரில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் புதனன்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், திருப்பூர் மாவட்ட குழந் தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும், அனைத்து அரசு துறை அலுவலர்கள் மற்றும் தன் னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், குழந்தை கள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்தும், மேற் கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் அறிவுரைகளை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சி யர் அறிவுறுத்தினார்.   முன்னதாக, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பில் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டு குழந்தைகள் பாதுகாப்பில் அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தினார். இக்கூட்டத்தில், மாவட்ட ஊராட்சி குழுத்தலை வர் சத்தியபாமா, துணைத்தலைவர் சிவகாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் ம.செல் வம், மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் மர கதம், காவல் துறை அலுவலர்கள், கல்வித்துறை, தொழிற்சாலைகள் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம், தொழிலாளர் நல ஆய்வாளர், மாவட்ட மாற்றுத் திறனாளி நல அலுவலர், இளைஞர் நீதிக்குழு உறுப் பினர், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர், சைல்டு லைன் அமைப்பினர் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண் டனர்.