tamilnadu

img

மாணவர்களுக்கு விதைபந்து விநியோகம்

நாமக்கல், நவ.27- நாமக்கல் அரசு கலைக் கல்லூரியில் மாணவர் களுக்கு குடிமக்கள் நுகர் வோர் மன்றத்தினர் விதை பந்துகளை விநியோகித் தனர். நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லுாரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்றம் மற்றும் தோட்டக்கலை துறை சார் பில் விதைபந்து விநியோக  நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல் லுாரி முதல்வர் (பொ)சுந்தரசோழன்  தலைமை வகித்தார். தாவரவியல்  துறை தலைவர் வசந்தாமணி வரவேற் றார். சிறப்பு அழைப்பாளராக மோகனுார்  வட்டார தோட்டக்கலைத்துறை உதவி  இயக்குனர் கந்தசாமி பங்கேற்று விதை பந்தின் முக்கியத்துவம் குறித்தும், அவை களை எந்த, எந்த இடங்களில் பயன்படுத்த  வேண்டும் எனவும் பேசி விதைபந்து களை விநியோகித்தார். இதையடுத்து கல்லூரி வளாகம், சுற்றுப் பகுதி, லத்துவாடி, கணவாய்பட்டி உள் ளிட்ட பல்வேறு இடங்களில் விதைபந்துகள் எறியப்பட்டன. இந்நிகழ்ச்சியில் கல்லூரி துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், ஆசி ரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். தோட்டக்கலை உதவி அலுவலர் செல்ல துரை நன்றி கூறினார். ஏற்பாடுகளை துறை உதவிப் பேராசிரியர் வெஸ்லி செய்தி ருந்தார்.