tamilnadu

img

‘பறிக்கப்படும் கல்வி உரிமை’ பிரசுரம் விநியோகம்

கோவை, செப்.8- பறிக்கப்படும் கல்வி உரிமை குறித்த பிரசுரம் பொள்ளாச்சியில் மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பினர் சார்பில் விநியோகம் செய்யப்பட்டன. பொதுப் பள்ளிக்கான மாநில மேடை ஏற்பாட்டில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “பறிக்கப் படும் கல்வி உரிமை” பிரசுரம் தமிழகம் முழுவதும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விநியோகிக் கப்படுகிறது. இதன்ஒருபகுதியாக, கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், மாணவர் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பின் சார்பில் மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் பிரசுரம் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட் டக் குழு உறுப்பினர் மகாலிங்கம், கோவை புறநகர் மதிமுக மாவட்டச் செயலாளரும், குகன் மில்ஸ் உரிமை யாளருமான செந்தில், விசிக மாவட்டச் செயலாளர் பிரபு  மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, திமுக, தபெதிக உள் ளிட்ட பல்வேறு அரசியல் கட்சியின் தலைவர்கள், நிர் வாகிகள் பலர் பங்கேற்றனர்.

;