பென்னாகரம், நவ.8- பாப்பாரப்பட்டி ஆரம்ப சுகா தார நிலையத்தில் எரிவாயு தட்டுப் பாடு காரணமாக நிலவேம்பு கசா யம் விநியோகம் நிறுத்தப்பட்டுள் ளதால் நோயாளிகள் அவதியடைந் துள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பாரப் பட்டியில் ஆரம்ப சுகாதார நிலை யம் செயல்பட்டு வருகிறது. பாப் பாரப்பட்டி பேரூராட்சி மற்றும் அருகிலுள்ள 20 ஊராட்சிகளைச் சேர்ந்த 70க்கும் மேற்பட்ட கிராமங் களைச் சேர்ந்த சுமார் 50 ஆயிரம் பேர் இங்கு சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அண்மையில் இப்பகுதியில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சல் தீவிரமாக பரவி யது. இதனால் தினந்தோறும் ஏராள மானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இதில் சிகிச்சைக் காக வருபவர்களுக்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையாக நில வேம்பு கசாயம் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிலவேம்பு கசாயம் விநி யோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஆரம்ப சுகாதார நிலைய ஊழியர்களிடம் விசாரிக் கையில், நிலவேம்பு கசாயம் காய்ச்சு வதற்குத் தேவையான எரிவாயு கிடைக்காததால் நிலவேம்பு குடிநீர் தயாரிக்கும் பணி தடை பட்டுள்ளதாக தெரிவித்தனர். போர்க்கால அடிப்படையில் நோய்த்தடுப்பு நடவடிக்கையில் அரசு ஈடுபட்டு வருவதாக கூறப் பட்டு வரும் நிலையில், நிலவேம்பு காசயம் வழங்கும் பணியானது எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப் படுவது வேதனையளிப்பதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.