பாசக்குட்டை பகுதி மக்களுக்கு மயான வசதி ஏற்படுத்திடுக மாவட்ட வருவாய் அலுவலரிடம் சிபிஎம் மனு
சேலம், செப். 10- நங்கவள்ளி ஒன்றியம், பாசக்குட்டை பகுதி மக்களுக்கு மயான வசதிக்கான இடத்தை ஒதுக்கீடு செய்து தரக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சேலம் மாவட்ட வருவாய் அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டது. இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி தலை மையில் அளிக்கப்பட்ட மனுவில் கூறியி ருப்பதாவது, சேலம் மாவட்டம், கெங்க வல்லி ஒன்றியம், பாசக்குட்டை பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தலித் சமூகத்தைச் சேர்ந்தவ மக்கள் குடியிருந்து வருகிறார்கள். இங்கு சுடுகாடு வசதி இல் லாததால் அப்பகுதியினர் நெடுஞ்சாலை ஓரமாக இன்றளவும் இறந்தவர்களை அடக்கம் செய்து வருகின்றனர். இவர்க ளுக்கு மயானத்திற்கான மாற்று இடம் தரு வதாக முதலமைச்சர் உள்ளிட்ட அதிகாரி கள் வாக்குறுதி அளித்தும் இதுவரை நிலம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. இப்பிரச்சனை தொடர்பாக கடந்த காலத்தில் பிரேதத்தை வைத்து அப்பகுதி மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியும், இதுவரை மாவட்ட நிர்வாகம் மயான வசதிக்கான நிலம் ஒதுக்கீடு செய்யவில்லை. இதன்கார ணமாக அப்பகுதியினர் பெரும் சிரமத்திற் குள்ளாகி வருவதால் உடனடியாக அப்பகுதி மக்களுக்கு மயான வசதிக்கான இடம் ஒதுக்கி தர வேண்டும் என மனுவில் வலி யுறுத்தப்பட்டிருந்தது. இம்மனுவினை பெற்றுக் கொண்ட வரு வாய் அலுவலர், ஒரு வார காலத்திற்குள் நிலத்தை ஒதுக்கீடு செய்து தருவதாக உறுதி யளித்ததாக கூறப்படுகிறது. மேலும், அதே பகுதியில் 70 ஆண்டுகளாக குடியிருக்கும் 37 ஆதிதிராவிட மக்களுக்கு பட்டா வழங் கக் கோரியும் மாவட்ட ஆதிதிராவிட நலத் துறை அதிகாரியை சந்தித்து மனு அளிக் கப்பட்டது. முன்னதாக, இம்மனுவினை அளிக்கை யில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மேவை. சண்முகராஜா, எம்.ராஜகோபால் மற்றும் ஊர் தலைவர் கணேசன், தங்கவேலு உள் ளிட்டோர் உடனிருந்தனர்.
தென்கரைக்கோட்டை - கொளகம்பட்டி இணைப்புச் சாலையை சீரமைக்க கோரிக்கை
தருமபுரி, செப்.10- தென்கரைக்கோட்டை முதல் கொளகம் பட்டி வரையிலான இணைப்புச் சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப் பட்டி வட்டம், தென்கரைக்கோட்டை முதல் கொளகம்பட்டி வரையிலான இணைப்புச் சாலையானது சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் கொண்டதாகும். இந்த சாலையை தென்கரைக்கோட்டை, வடகரை, மங்கா னேரி, கொளகம்பட்டி, நம்பிப்பட்டி, எச்.தொட்டம்பட்டி, பச்சினாம்பட்டி, ஆண்டிப் பட்டி புதூர், வாழைத்தோட்டம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். இந்த வழியில் அரசு நகர் பேருந்து, தனியார் பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகள், லாரிகள், டிராக்டர் கள், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் தொடர்ச்சியாக வந்துச் செல் கின்றன. இதனால் தென்கரைக்கோட்டை முதல் கொளகம்பட்டி வரையிலான தார் சாலையா னது குண்டும் குழியுமாக போக்குவரத் துக்கு பயனற்ற வகையில் மாறியுள்ளதால் தற்போது இந்த சாலை வழியாக வாகனங் கள் சென்றுவர முடியாத நிலையுள்ளது. ஆகவே, சாலையை சீரமைக்க வலியுறுத்தி விவசாயிகள் உள்ளிட்ட பொதுமக்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என அந்தப் பகு தியிலுள்ள கிராம மக்கள் புகார் கூறுகின் றனர். எனவே, தென்கரைக்கோட்டை முதல் கொளகம்பட்டி வரையிலான தார் சாலையை சீரமைப்பு செய்ய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விபத்தில் ஒருவர் பலி
சேலம், செப்.10- சேலம் சிவதாபுரம் அருகே உள்ள திருமலை கிரி பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது பேரன் அரவிந்துடன் சேலம் நோக்கி தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். திரு மலைகிரி பகுதியில் சென்று கொண்டிருந்தபோது எதி ரில் இருசக்கர வாகனத்தில் வந்த சக்திவேல் என்பவர் எதிர்பாராதவிதமாக கணே சன் வாகனம் மீது மோதி னார். இந்த விபத்தில் கணே சன் பரிதாபமாக உயிரி ழந்தார். இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசா ரணை நடத்தி வருகின்ற னர்.