tamilnadu

img

தருமபுரி: மின்னல் தாக்கி சிறுமி பலி

தருமபுரி, நவ.10- தருமபுரி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கும்பலப்பாடி பகுதியைச் சேர்ந்தவர் சிவசக்தி கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மோனிஷா (6) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். சிவசக்தி அதே பகுதியில் புதியதாக வீடுகட்டி அங்கே குடியேறி னார். அந்த புதிய வீட்டில் வெள்ளியன்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப் போது நள்ளிரவில் அப்பகுதியில் மின்னலுடன் கூடிய  மழை பெய்தது. அச்சமயம் சிவசக்தி வீட்டின் சமையல் அறையில் உள்ள புகை போக்கியை  மின்னல் தாக்கி யுள்ளது. இதில் மோனிஷா பலத்த காயமடைந்தார்.  இதேபோல் சிவசக்தி வீட்டின் அருகே உள்ள பச்சை யப்பன் மகன் அன்பரசு(14) என்பவரையும் மின்னல் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். இதனையடுத்து இரு வரையும் தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக் காக அனுமதிக்கப்பட்டனர். இதில் சிகிச்சை பலனின்றி மோனிஷா இறந்தார். அன்பரசுக்கு தீவிர சிகிச்சை அளிக் கப்பட்டுவருகிறது.

;