பழங்குடியினர் பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்
தருமபுரி, செப்.22- கலசப்பாடி அரசு பழங்குடியினர் நல உயர்நிலைப் பள்ளியில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங் களை நிரப்ப வேண்டும் என அக்கிராம மக்கள் வலியு றுத்தியுள்ளனர். தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், சித்தேரி ஊராட்சிக்குட்பட்ட கலசப்பாடியில் அரசு மலைவாழ் பழங்குடியினர் நல உண்டு, உறைவிட உயர்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 175 மாணவ, மாணவியர்கள் பயின்று வருகின்றனர். தற் போது இப்பள்ளியில் இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். ஆனால், பழங்குடியினர் நலத்துறை சார்பில் நடைபெறும் அரசுப் பள்ளியில் 25க்கும் குறை வான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் பணிபுரியும் நிலையுள்ளது. அதிக மாணவர்கள் படிக்கும் கலசப்பாடி அரசு உயர்நிலைப் பள்ளியில் குறைவான ஆசிரியர்கள் பணிபுரிவதால் இங்குள்ள பழங்குடியின மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கின்றது. எனவே, கலசப்பாடி மலைவாழ் பழங்குடியினர் நல அரசு உயர்நிலைப் பள்ளிக்கு தேவையான ஆசிரி யர்களை விரைந்து நியமிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரூரில் மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலை அமைக்க தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்
தருமபுரி, செப்.22- அரூரில் மரவள்ளிக்கிழங்கு தொழிற்சாலை அமைக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரூர் வட்டார சிறப்புப் பேரவையில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரூர் வட்டார சிறப்புப் பேரவை கூட் டத்திற்கு, சங்க வட்டாரத் தலைவர் கே.என்.ஏழுமலை தலைமை வகித் தார். மாவட்டத்தலைவர் கே.என்.மல்லையன் சிறப்புரையாற்றினார். சங்க நிர்வாகிகள் எஸ்.கே. கோவிந்தன், ஏ.நேரு, நிர்வாகிகள் சுப்பிரமணி, ஜோதி உள்ளிட்டோர் பேசினர். மழைக்காலங்களில் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு அதிக அளவில் உபரி நீர் கடலில் வீணாக கலக்கிறது. எனவே, வீணாகும் நீரை தருமபுரி மாவட்டத் திலுள்ள ஏரிகள், குளம் குட்டைகளில் நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அரூர் தொகுதியில் அரசு சார்பில் மரவள்ளி கிழங்கு அரைவை ஆலை அமைக்க வேண்டும். தருமபுரி மாவட்டத்தில் காய்ந்து போன தென்னை, மா, பாக்கு உள்ளிட்ட வேளாண் பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். தீர்த்தமலை வட்டாரப் பகுதியை தனி ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
புதிய நிர்வாகிகள் தேர்வு
தமிழ்நாடு விவசாயிகள் சங்க அரூர் வட்டாரத் தலைவராக பி.குமார், செய லராக எஸ்.கே.கோவிந்தன், பொருள ராக ஏ.நேரு, துணைத் தலைவர்களாக சி.சிங்காரம், எம்.புத்தன், துணைச் செயலர்களாக எஸ்.பி.சின்னராசு, ஏழுமலை உள்ளிட்ட 19 பேர் கொண்ட கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய் யப்பட்டனர்.
பாதாள சாக்கடை பணியில் பாரபட்சம் வியாபாரிகள் சாலை மறியல்
சேலம், செப்.22- பாதாள சாக்கடை கட்டுமான பணியில் சேலம் மாநக ராட்சி நிர்வாகம் பாரபட்சத்துடன் செயல்படுவதாக கூறி துணிக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் சனியன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். சேலம், கோட்டை மாரியம்மன் கோவில் அடுத்த முதல் அக்ரஹாரம் சின்னக்கடை வீதி ஆகிய பகுதிகளில் சேலம் மாநகராட்சி சார்பில் பாதாள சாக்கடை அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த தொடங்கியது. இந்த திட்டத்தி னால் சின்ன கடை வீதி பகுதியில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட துணிக்கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங் களின் வியாபாரம் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால் தீபாவளி நேரத்தில் மாநகராட்சி பாதாள சாக்கடை அமைக்கும் பணி நடத்தக் கூடாது என்றும் தீபாவளி முடிந்த பிறகு பாதாள சாக்கடை அமைக்கும் பணியை செயல்படுத்த மாநகராட்சி முன்வரவேண்டும் என்றும் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதை கண்டுகொள்ளாத சேலம் மாநக ராட்சி நிர்வாகம் இரவோடு இரவாக சாலையைத் தோண்டி பாதாள சாக்கடை அமைக்கும் பணியை செயல் படுத்தியது. இதனால் அதிர்ச்சியடைந்த சின்ன கடை வீதி வியாபாரிகள் சனியன்று திடீர் சாலை மறியலில் ஈடு பட்டனர். தகவலறிந்த சேலம் நகர காவல் நிலைய அதி காரிகள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்த வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் மாநகராட்சி நிர்வா கத்திடம் பேசி சுமூக தீர்வு ஏற்படுத்தி தருவதாக உறுதி யளித்தனர். இதனையடுத்து சாலை மறியல் செய்த வியாபாரிகள் கலைந்து சென்றனர்.
புகையிலை- மது விற்ற 28 பேர் கைது
தருமபுரி, செப்.22- தருமபுரி மாவட்டம் முழுவதும் தடைசெய்யப் பட்ட புகையிலை மற்றும் மது விற்பனை செய்த 28 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். தருமபுரி மாவட்டத்தில் மது விற்பனை செய்ப வர்கள், தடை செய்யப்பட்ட புகையிலை விற்பவர்கள் மற்றும் சூதாட்டத்தில் ஈடு பட்டவர்களை கைது செய் யக்கோரி தருமபுரி மாவட்ட காவல்கண்காணிப்பாளர் ராஜன் காவல்துறையின ருக்கு உத்தரவிட்டார். இது குறித்து தருமபுரி மாவட்ட முழுவதும் உள்ள காவல் துறையினர் சோதனையில் ஈடுபட்டனர். இச்சோதனையில் தடை செய்யப்பட்ட புகையி லையை விற்றவர்கள் 13 பேரும், கள்ளத்தனமாக மது விற்ற 12 பேரும் மற்றும் சூதாடிய 2 பேரும் கைது செய்யப்பட்டனர். தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 27 பேர் கைது செய்யப் பட்டனர்.