tamilnadu

img

டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

தருமபுரி, அக்.13- பெல்ரம்பட்டி, அரசு ஆரம்ப சுகாதார நிலை யத்தின் சார்பாக டெங்கு நோய் குறித்து இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாலக்கோடு வட்டார  வளர்ச்சி அலுவலர் உ.கெளரி தலைமை வகித் தார். மாவட்ட மலேரியா அலுவலர் சுப்ரமணியன்   இருசக்கரவாகன  பிரச்சாரத்தை  துவக்கி வைத் தார். டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள்  குறித்து சுகாதார மேற்பார்வையாளர் ஏ.சேகர்,  துணைவட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாக்ரடீஸ்,  ஆதிம் ஆகியோர் பேசினர். இறுதியில் நல்லூர் ஊராட்சியின் ஊராட்சி செயலாளர் சதீஸ் நன்றி கூறினார். ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் உட்பட பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர். டெங்கு தடுக்கும் விதம்,பாதிப்பு குறித்து விரிவாக பிரச்சாரம் மேற் கொள்ளப்பட்டது. 

;