அரசுத் துறைகளில் பணியாற்றி கொரோனா நோய் தொற்றால் இறந்த தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம் காப்பீடாய் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணி வழங்க வேண்டும் என வலியுறுத்தி
பொது தொழிலாளர் சங்கத்தினர் கோவை சிவானந்தபுரம் பகுதியில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில், சிவானந்தபுரம் கிளை செயலாளர் எ.செல்லக்குட்டி தலைமை வகித்தார். எல்.பி.எப் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் கலந்து கொண்டனர்.