tamilnadu

img

ஊராட்சி நிர்வாகம் சார்பில் கட்டி முடிக்கப்பட்ட கடைகளை உடனே வாடகைக்கு விடுமாறு கோரிக்கை

அவிநாசி, மே 9-அவிநாசியில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் அலுவலகம் முன்பு ஊராட்சி நிர்வாகம் சார்பில் வணிக வளாகம் கட்டப்பட்டன. இந்த வளாகத்தில் உள்ள கடைகள் வாடகைக்கு விடாமல் உள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அவிநாசி-சேவூர் செல்லும் சாலையில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் மூன்று கடைகள் கட்டப்பட்டது. இவை கட்டி முடிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த பின்னும் திறக்கப்படாமல் உள்ளது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டபோது, கட்டிடத்திற்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. அதனால்தான் கடைகளை வாடகைக்கு விடப்படவில்லை. மேலும் இது தொடர்பாக செய்தித்தாள்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டு, பின்பு வாடகைக்கு விடப்படும் என தெரிவித்தார்.இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்தோர் கூறுகையில், இக்கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்கள் மூடிய நிலையிலேயே உள்ளது. இது சம்பந்தமாக ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் கேட்டால் வாடகைக்கு விடப்படும் என கூறுகின்றார். இதே பதிலை பல மாதங்களாக கூறி வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் கட்டிடம் சிதிலமடைந்துவிடும். எனவே கடைகளை உடனடியாக வாடகைக்கு விட வேண்டுமென தெரிவித்தனர்.

;