பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தல்
சேலம், நவ. 4- பால் கொள்முதல் செய்யும்போதே பணம் பட்டுவாடா செய்ய வேண்டு மென பால் உற்பத்தியாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் கள் சங்கத்தின் சேலம் மாவட்ட 5 ஆவது மாநாடு மாவட்டத் தலைவர் பி.அரியாக்கவுண்டர் தலைமையில் நடைபெற்றது. தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் சேலம் மாவட்டச் செயலா ளர் ஏ.ராமமூர்த்தி மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.மாதேஷ்வரன் அறிக்கை சமர்ப்பித்து பேசினார். மாநில பொருளாளர் திருவள்ளூர் சங்கர் சிறப்புரை ஆற்றினார். இம்மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு, குஜ ராத் மாநிலத்தில் தானியங்கி இயந் திரம் மூலம் பால் கொள்முதல் செய்யப் பட்டு அங்கேயே அளவு கணக்கிட்டு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை போல் தமிழகத்திலும் அமல்படுத்த வேண்டும். கால்நடைத் தீவணங் களை தரமானதாகவும், 50 சதவிகித மானிய விலையிலும் வழங்க வேண் டும். ஆவினில் தலைவிரித்தாடும் ஊழல்களை களைந்திட வேண்டும். சத்துணவு திட்டத்தில் ஆவின்பாலை யும் சேர்த்து பள்ளி குழந்தைகளுக்கு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். இதில் மாவட்டத் தலைவ ராக பி.அரியாக்கவுண்டர், மாவட்டச் செயலாளராக இரா.மாதேஷ்வரன், மாவட்டப் பொருளாளராக கே.அழகு துரை, மாவட்டத் துணைத்தலைவராக பி.மாணிக்கம், மாவட்டத் துணைச் செயலாளராக கமலக்குமாரி மற்றும் 15 பேர் கொண்ட புதிய மாவட்டக்குழு தேர்வு செய்யப்பட்டது.