tamilnadu

img

4 ஜி அலைக்கற்றையை உடனடியாக வழங்கிடுக

பொள்ளாச்சி, மே 3-4 ஜி அலைக்கற்றை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு உடனடியாக வழங்கிடக் கோரி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் பொள்ளாச்சியில் தொடர் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு 4 ஜி அலைக்கற்றை சேவையை உடனடியாக வழங்கிட வேண்டும், பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள பிஎஸ்என்எல் பொதுத்துறையின் சொத்துக்களை பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கே வழங்க வேண்டும். விஆர்எஸ் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் பொள்ளாச்சியில் தொடர் பிரச்சார இயக்கம் நடைபெற்றது. கடந்த ஏப்ரல் 30 ம் தேதியன்று தொடங்கிய பிரச்சார இயக்கமானது, கோமங்கலம் புதூர், ஏரிப்பட்டி, பொள்ளாச்சி பகுதிகளில் முக்கிய இடங்களில் மே 3 ம் தேதிவரை நடைபெற்றது. வெள்ளியன்று பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் நடைபெற்ற பிரச்சார இயக்கத்திற்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை தலைவர் ஏ.சாகுல் ஹமீது தலைமை வகித்தார்.சங்கத்தின் வட்டகிளை செயலாளர் ஆர்.பிரபாகரன் வரவேற்று பேசினார். கோவை மாவட்ட அமைப்புச் செயலாளர் பி.தங்கமணி சிறப்புரையாற்றினார். இதில் அனைத்திந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகிகள் ஜெயமணி, கருப்பசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகி வி.சந்திரசேகரன் நன்றி கூறினார்.

;