tamilnadu

பழுதடைந்த ஸ்கேன் இயந்திரத்தை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தருமபுரி, ஜூன் 2- ஏரியூர் அரசு மருத்துவமனையில் பழுதடைந்த ஸ்கேன் இயந்திரத்தை சீரமைக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த ஏரியூரில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்து வமனைக்கு ஏரியூர், நாகமரை, பெரும்பாலை, சின்னம் பள்ளி உள்ளிட்ட சுற்று வட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இவர்களில் சிலர் உள் நோயாளிகள் பிரிவில் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். மேலும் அப்பகுதியை சுற்றியுள்ள ஏராளமான கர்ப்பிணி பெண்கள் பிரசவத்திற்காக பெருமளவில் வந்து செல்கின் றனர்.  ஆனால் கர்ப்பிணி பெண்களை பரிசோதிக்கும் ஸ்கேன் இயந்திரம் கடந்த 3 மாதத்திற்கு மேலாக பழுதடைந்த நிலை யிலேயே உள்ளது. மேலும் ரத்தப்பரிசோதனை வசதியும் இந்த மருத்துவமனையில் செயல்படாத நிலையில் உள் ளது. எனவே கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்படாத வகை யில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக ஏரியூர் மருத்துவம னைக்கு ஸ்கேன் இயந்திரத்தை சீரமைத்து தர வேண்டு மென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.