அவிநாசி, அக்.10- அவிநாசி அருகே விவசாய தோட் டத்திற்குள் புகுந்து சந்தன மரத்தை வெட்டி கடத்தி சென்ற சம்பவம் பெரும் அதிர்ச் சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம், அவிநாசி சாலைப்பாளையம் பகுதியில் வசிப்பவர் முத்துக்குமார். இவருக்கு சொந்தமான தோட்டம், அவரது வீட்டருகே உள்ளது. இங்கு, சந்தனம், தேக்கு உட்பட சில வகை மரங்கள் உள்ளன. இந்நிலையில் வியாழ னன்று இரவு, மர்ம நபர்கள் சிலர் இவரது தோட்டத்துக்குள் புகுந்து சந்தன மரத்தை வெட்டி, ஒரு பகுதி மரத்தை எடுத்து சென் றுள்ளனர். மேலும் அருகேயுள்ள மற்றொரு மரத்தை வெட்டுவதற்கும் முயற்சி செய்துள் ளனர். இதன்பின் தோட்டத்தை ஒட்டிய கம்பி வேலியை அறுத்து, தப்பி சென்றுள்ள னர். இச்சம்பவம் அப்பகுதியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலை யில், இதுகுறித்து காவல்துறையினர் விசா ரித்து வருகின்றனர்.