அவிநாசி பிப்.14 அவிநாசி அருகே கருவலூரில் பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளது. அவிநாசி ஒன்றியம், கருவலூர் ஊராட்சிக்குட் பட்ட ராமநாதபுரம் செல்லும் சாலையில் ஆஞ்ச நேயர் கோயில் உள்ளது. இப்பகுதியில் 20க்கும் மேற்பட்ட பல்வேறு வகையான மரங்கள், செடி களுடன் பூங்காவை போன்று பராமரித்து வரு கின்றனர். இந்நிலையில் அங்கிருந்த நான்கு மரங்களை சிலர் வெட்டி சாய்த்து உள்ளனர். இதுகுறித்து கிராம நிர்வாக அதிகாரிக்கு சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதுதொடர்பாக ஆய்வு செய்த கிராம நிர்வாக அதிகாரி உரிய அனுமதி இன்றி மரங்கள் வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.