பொள்ளாச்சி, மார்ச் 17- பொள்ளாச்சியில் மலைவாழ் மக்களிடையே கொரோனோ வைரஸ் குறித்து, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத் தப்பட்டது. கோவை மாவட்டம், பொள்ளாச்சி அடுத்த ஆழி யார் அருகே உள்ள புளியங்கண்டி மலைவாழ் கிராமத் தில் மலைவாழ் மக்களிடையே கொரோனோ வைரஸ் குறித்தும், கொரோனோ நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. இதில், கைகளை நன்கு கழுவவும், இயற்கை உணவுப்பொருட்களான மஞ்சள், திப்பிலி உள்ளிட் டவை உணவில் எடுத்துக்கொள்ளவும், தினமும் காலை உப்புநீரால் வாய்கொப்பளிக்கவும் அறிவு றுத்தப்பட்டது. இதில் ஆனைமலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரமசிவம் மற்றும் வழக்கறிஞர் எம்.ரங்கராஜன், சமூக ஆர்வலர் பவுலினா உள்ளிட்டோர் பங்கேற்று விழிப்பு ணர்வு குறித்து உரையாற்றினர். இதில் ஏராளான மலைவாழ் மக்கள் கலந்துக்கொண்டனர்.