கோவை, ஜூன் 20- பெட்ரோல், டீசல் விலை உயர் வைக் கண்டித்து சனியன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டங் களில் ஈடுபட்டனர். பெட்ரோல் விலை கடந்த சில தினங்களில் மட்டும் ரூ.6.55 வரையும், டீசல் விலை ரூ 7.04 வரையும் உயர்த்தப் பட்டுள்ளது. இது வரலாறு கண்டிராத அளவிலான உயர்வாகும். கடந்த 2015ஆம் ஆண்டு மோடி ஆட்சிக்கு வருகிற போது பெட் ரோலின் விலை ரூ.61.06 ஆகவும், டீச லின் விலை ரூ.46.80 ஆகவும் இருந் தது. ஆனால், தற்போது பெட்ரோலின் விலை ரூ.81.67, டீசலின் விலை ரூ.74.62 ஆகவும் உயர்ந்துள்ளது. ஆகவே, பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்பப் பெறவும், சர்வ தேச சந்தையில் பெட்ரோலியத்தின் மீதான விலை சரியும்போது அதன் பலனை மக்களுக்கு வழங்கும் வகையில் விலையை மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்தியும், கோவை ஜீவா இல்லத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மாவட்டச் செயலாளர் வி.எஸ்.சுந்தரம், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். திருப்பூர் திருப்பூர் வெள்ளியங்காடு பகுதி யில் இருசக்கர வாகனம் மற்றும் சிலிண் டர்களுக்கு மாலை அணிவித்து பாடை கட்டியும், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நான்கு சக்கர வாக னத்தை கயிறு கட்டி இழுத்தும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசு ஊரடங்கு காலத்திலும் பொது மக்களை வஞ்சிக்கும் வகையில் பெட் ரோல் டீசல் விலையை கடுமையாக உயர்த்தி வருவதாக குற்றம் சாட்டி கண்டன முழக்கங்களை எழுப்பினர். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட் டச் செயலாளர் எம்.ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.