கோவை, மார்ச் 9 - கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்ப தாக எழுந்த சந்தேகத்தை தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த நபர் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவ கண்காணிப்பில் உள்ளார். கொரோனா வைரஸ் பரவலை தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் வெளிநாடுகளி லிருந்து வருபவர்கள் அங்கேயே தடுத்து நிறுத்தப்பட்டு பரிசோதனைக்கு உட்படுத் தப்படுகின்றனர். இதனிடையே கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவர் ஞாயிறன்று மலேசியாவிலிருந்து திருச்சி விமான நிலையத்தில் இறங்கி அங்கி ருந்து கோவை வந்துள்ளார். பின்னர் ராமநாதபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் வேறொரு சிகிச்சைச் காக சென்றுள்ளார். அப்போது அவருக்கு சளி, காய்ச்சல் இருப்பதை அறிந்த மருத்து வர்கள் சந்தேகத்தின் பேரில் கோவை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். இதனையடுத்து திங்களன்று இஎஸ்ஐ மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை பிரிவுக்கு மாற் றப்பட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து, அவரது ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனிடையே, இவர் தங்கியிருந்த ஹோட் டல் அறை, ஹோட்டலில் இருந்தவர்கள், இவருக்கு சிகிச்சை பார்த்த செவிலியர்கள் உட்பட அனைவரும் சுகாதாரத்துறையின் கண்காணிப்பில் கொண்டு வரப்பட்டு உள்ளனர். தற்போது, கேரள இளைஞரின் உடல்நலம் சீராக உள்ளதாகவும், இருப்பி னும் ரத்த மாதிரிகள் அறிக்கை பெறப்பட்ட பிறகே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்கப்படும் என சுகாதா ரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதேபோன்று, சார்ஜாவில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த நபர், வீட்டிலேயே சுகாதாரத்துறை கண்காணிப் பில் வைக்கப்பட்டுள்ளார்.