tamilnadu

கோவையில் புதிதாக14 பேருக்கு கொரோனா தொற்று

சென்னை 
தமிழகத்தில் பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் கொரோனா பரவல் இன்னும் கட்டுக்குள் வந்த பாடில்லை. தினமும் மின்னல் வேகத்தில் பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருவதால் மக்கள் மீண்டும் அச்சமடைந்து வருகின்றனர்.  
இந்நிலையில் தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 2,115 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இதன்மூலம் மொத்த பாதிப்பு 54,449 ஆக உயர்ந்தள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 41 பேர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 666 ஆக அதிகரித்துள்ளது. ஆறுதல் செய்தியாக தமிழகம் முழுவதும் இன்று ஒரே நாளில் 1,630 பேர் கொரோனாவிலிருந்து மீண்டுள்ள  நிலையில், இதுவரை மொத்தமாக 30,271 பேர் குணமடைந்துள்ளனர்.

அதிகபட்சமாக சென்னையில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் அங்கு மொத்த பாதிப்பு 38, 327 ஆக அதிகரித்துள்ளது.   

;