tamilnadu

img

கொரோனா அறிகுறி - 3 பேரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

கோவை, மார்ச் 19 -   கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் அறிகுறியுடன் அனும திக்கப்பட்டுள்ள ஸ்வீடன் நாட்டிற்குச் சென்று வந்த தம்பதிகள் மற்றும் கல்லூரி மாணவி ஒருவர் என மூன்று பேரின் ரத்த மாதிரிகள்  பரிசோதனைக்காக சென்னை அனுப்பப் பட்டுள்ளது. வெளிநாடுகளில் இருந்து கோவைக்கு வந்த  232 பேரை சுகாதாரத் துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதில் 45 பேர் வெளிநாட்டினர் மற்றும் 187 பேர் வெளி நாடு சென்று கோவை திரும்பியவர்கள். குறிப்பாக, வெளிநாடுகள் சென்று கோவை  திரும்பியவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக் கப்படுகின்றனர். இந்த நிலையில், ஸ்வீடன் சென்று கோவை மேட்டுப்பாளையம் வந்த  தம்பதியருக்கு சளி, காய்ச்சல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருந்ததால் அவர்கள் மேட்டுப்பாளையம் மருத்துவமனைக்கு அனுப் பப்பட்டு பின்னர் அங்கிருந்து உரிய பாது காப்பு அம்சங்களுடன் கோவை அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல், பெங்களூரில் உயர்கல்வி பயின்று வரும் 23 வயது மதிக்கத்தக்க மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு பெங்களூரிலிருந்து கோவை வந்தார். அவருக்கு கொரோனா அறி குறி இருப்பது தெரியவந்ததையடுத்து சூலூரில்  உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். தற்போது இந்த மூன்று பேரும் கொரோனா சிறப்புப் பிரிவில் கண்காணிக்கப்பட்டு வரு கின்றனர். இவர்களின் ரத்த மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கேரள மாநில எல்லையில் ஆட்சியர் சோதனை
கேரளா மாநில எல்லையான வாளையார்‌ சோதனைச் சாவடியில்‌ கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு மற்றும்‌ முன்னெச்சரிக்கை நட வடிக்கைகள்‌ மருத்துவக்‌ குழுவினரால்‌ மேற் கொள்ளப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர்‌ கு.ராசாமணி புதனன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் செய்தி யாளர்களிடம் கூறுகையில், கொரோனா வைரஸ்‌ நோய்‌ தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதன்‌ காரணமாக இதுவரை கோவை மாவட்டத்தில்‌ கொரோனா வைரஸ்‌ பாதிப்பு இல்லை. இருப்பினும் நோய்‌ தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்‌ மற்றும்‌ விழிப்புணர்வு பொதுமக்களிடத்தில்‌ ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அண்டை மாநில மான கேரளாவில்‌ இருந்து வரும்‌ பயணிகள்‌  மூலம்‌ கொரோனா வைரஸ்‌ பரவாமல்‌ தடுப்ப தற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.  இதன்ஒருபகுதியாக ஆம்னி பேருந்துகள்,  சுற்றுலா பேருந்துகள்‌, அரசு பேருந்துகள்‌, கார்கள்‌, சரக்கு வாகனங்கள்‌ ஆகியவைகளை முழுமையாக கிருமிநாசினி கொண்டு தூய் மைப்படுத்தும்‌ பணி நடைபெறுகிறது. மாநி லத்தின்‌ எல்லைப்பகுதிகளான வாளையார்‌, முள்ளி, மேல்பாவியூர்‌, வேலந்தபாளையம்‌, வீரப்பகவுண்டனூர்‌, கோபாலபுரம்‌, மீனாட்சி புரம்‌, வழுக்குப்பாறை, ஆனைகட்டி ஆகிய  சோதனை சாவடிகளில்‌ சுகாதார முன்னெச்ச ரிக்கைத்‌ தடுப்பு நடவடிக்கைகள்‌ மேற்கொள் ளப்பட்டு வருகிறது.

கேரளா மாநில எல்லைப்பகுதியான வாளையார்‌ சோதனை சாவடியில்‌ 24  மணிநேரமும்‌ செயல்படக்கூடிய  10 மருத்துவக் குழுக்கள்‌ நோய்தடுப்பு மற்றும்‌ கண்காணிப் புப் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்‌. கேரளா மாநிலத்திலிருந்து நமது மாவட்டத் திற்கு வருகை தரும்‌ அனைத்து வாகனங்க ளையும்‌ இச்சோதனை சாவடிகளில்‌ முழுமை யாக சுகாதார பரிசோதனை செய்த பிறகே அனுமதிக்கப்படுகின்றது. பேருந்து பயணிகள்‌, வாகன ஓட்டிகள்‌ என அனைவரையும்‌ மருத் துவ குழுவினரால்‌ சோதனை செய்யப்பட்டு அனுப்பப்படுகின்றனர்‌.  இப்பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள வருவாய் துறை,  உள்ளாட்சித்துறை,  காவல்துறை,  போக் குவரத்துத்துறை மற்றும்‌ சுகாதாரத்துறை  அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ள துடன்‌, தேவையான விழிப்புணர்வும்‌ அளிக் கப்பட்டுள்ளது. முகக்கவசங்களை அனைவரும்‌ அணிந்து கொள்ளவேண்டியது அவசியமில்லை. சளி,  இருமல்‌ உள்ளவர்கள்‌ மட்டுமே முகக்கவ சத்தை போட்டுக்கொள்ளலாம்‌. மேலும்‌, முகக்க வசங்கள்‌ தட்டுப்பாட்டைத் தடுக்க கோவை மாவட்ட மகளிர்‌ திட்டத்தின்‌ மூலம்‌ மகளிர்‌ சுய  உதவிக்குழுவினால்‌ முகக்கவசங்கள்‌ தயாரிக் கும் பணி நடைபெற்று வருகிறது.

அரசு மருத்து வமனைகள்‌, தனியார்‌ மருத்துவமனைகள்‌  மற்றும்‌ முகக்கவசங்கள்‌ தேவைப்படுவோர்‌ மாவட்ட ஆட்சியரகத்தில்‌ உள்ள மகளிர்‌திட்ட அலுவலகத்தை அணுகி குறைந்த விலையில்‌  பெற்றுக்கொள்ளலாம்‌. வெளிமாநிலங்கள்‌ மற்றும்‌ வெளியூர்களுக்கு சுற்றுலா செல்வ தையும்‌, தேவையற்ற பயணங்களையும்‌ பொது மக்கள்‌ தவிர்த்திடவேண்டும்‌. அடிக்கடிக் கைகளை சுத்தமாக கழுவுவதன்‌ மூலம்‌ இக்கிரு மிகளிடமிருந்து நம்மை நாம்‌ தற்காத்து கொள்ள முடியும்‌. அனைத்துத் தரப்பு மக்களும்‌ மாவட்ட  நிர்வாகத்தின்‌ சார்பில்‌ எடுக்கப்படும்‌ அனைத்து நோய்‌ தடுப்பு நடவடிக்கை முயற்சிக ளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும்‌.  மேலும்‌, கொரோனா வைரஸ்‌ தொற்று குறித்து  சமூக வலைத்தளங்கள்‌, ஊடகங்கள்‌, பொதுவெ ளிகளில்‌ வதந்திகள்‌ பரப்புபவர்கள்‌ மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்‌. கொரோனா வைரஸ்‌ குறித்து உறுதிப்படுத் தப்படாத தகவல்களையும்‌, வதந்திகளையும்‌ பொது மக்கள்‌ நம்ப வேண்டாம்‌. மேலும்‌, சளி, காய்ச்சல்‌, இருமல்‌ உள்ளவர்கள்‌ உடனடியாக அரசு மருத்துவமனை அணுகிட வேண்டும்‌ என  மாவட்ட ஆட்சியர்‌ கு. ராசாமணி தெரிவித்தார்‌.

நீதிமன்றத்தில் கொரோன சோதனை
கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் கொரோனா பரிசோதனை யில் கொரோனா அறிகுறிகளுடன் இருந்த இரண்டு இளம் வழக்கறிஞர்கள் கோவை அரசு  மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு உள்ள னர். கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வழக்க றிஞர் சங்கத்தின் சார்பில் பல்வேறு வழிகாட் டல்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல,  வியாழனன்று நீதிமன்ற வளாகத்தில் வழக்கறி ஞர்களுக்கு கொரோனா அறிகுறிகள் பரிசோ தனை செய்யப்பட்டது. இந்நிலையில், ஒரு பெண் வழக்கறிஞர் மற்றும் ஆண் வழக்கறிஞ ருக்கு நடைபெற்ற சோதனையில் இருவருக்கும்  அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. இதைய டுத்து, அவர்கள் இருவரும் கோவை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.