tamilnadu

img

கோவையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது- மாவட்ட ஆட்சியர் தகவல்

கோவை, மார்ச் 23–  கொரோனா அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் திங்க ளன்று செய்தியாளர்களிடம் தெரிவித் தார். தமிழகத்தில் ஸ்பெயின் நாட்டிலி ருந்து வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் ஞாயிறன்று டுவிட்டரில் தெரி வித்திருந்தார். இந்நிலையில் கொரோனா அறிகுறிகளோடு ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த பெண் ணுக்கு கோவை இ.எஸ்.ஐ மருத்துவ மனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரி களை பரிசோதனை செய்ததில் அவ ருக்கு கொரோனா உறுதி செய்யப்பட் டதாகவும், அவர் குறித்துதான் விஜய பாஸ்கர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார் எனவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தனி வார்டில் அளிக்கக்கூடிய சிகிச்சைகள் குறித்து பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ஸ்பெயின் நாட்டிலிருந்து கோவைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகி றது. மார்ச் 31 வரை பொதுமக்கள் வீட் டில் இருப்பதை கடைபிடிக்க வேண் டும் என தெரிவித்தார்.