கோவை, ஜூன் 20 - தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகங்களில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் கடைபிடிப் பது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தலைமை யில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற் றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி தெரிவித்ததாவது, கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிர மாக மேற்கொள்ளப்பட்டு வருகின் றது. கோவை மாவட்டத்தில் கடந்த மே மாதம் 30ஆம் தேதி வரை கொரோனா தொற்று இல்லாமல் இருந்து வந்தது. ஆனால், தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது.
எனவே, தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாட்கள் தவிர வெளி ஆட்களை அனுமதிக்கக்கூடாது. தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவ கங்களில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை பின்பற்றி பணியினை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், பணிக்கு வரும் பணி யாளர்களுக்கு தினந்தோறும் தெர்மல் ஸ்கேனிங் செய்ய வேண்டும். சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந் தால் அவர்களை உடனடியாக தனி மைப்படுத்தி சுகாதாரத்துறைக்கு தக வல் தெரிவித்து, கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ள வேண் டும். தொழில் நிறுவனங்கள் மற்றும் உணவகத்தின் நுழைவாயிலில் கை கள் சுத்தப்படுத்துவதற்கு சோப்பு ஆயில் மற்றும் சானிடைசர் கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
வாடிக்கை யாளர்கள் முகக்கவசம் அணிந்தவர் களை மட்டுமே அனுமதிக்க வேண் டும். மேலும், அரசால் வெளியிடப் பட்டுள்ள நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை தீவிரமாக கடை பிடிப்பதை அனைவரும் உறுதிசெய்ய வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித் தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கார்த்திகை வாசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) பொன்முத்து ராமலிங்கம், மாவட்ட உணவுப் பாது காப்புத் துறை நியமன அலுவலர் கு.தமிழ்செல்வன், துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) ரமேஷ்குமார், கோவை மாவட்ட உணவகங்களின் உரிமையாளர்கள், மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களின் உரிமை யாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.