tamilnadu

கோவையில் 300-ஐ நெருங்குகிறது கொரோனா தொற்று

கோவை, ஜூன் 23- கோவையில் செவ்வாயன்று 18 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 292 பேர் கொரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ளனர். கோவை காந்திபுரம் அருகே உள்ள கடைவீதி பகு தியில் 8 பேருக்கு திங்களன்று கொரோனா பாதிப்பு உறு தியானதையடுத்து, காந்திபுரம் பகுதியில் உள்ள 3, 4,10 வது மற்றும் நேரு வீதி ஆகிய நான்கு வீதிகள் தகர சீட்டுகள் வைத்து அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலை யில் செவ்வாயன்று மேலும் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஆண்கள் 14 பேர், பெண்கள் 4 பேர் ஆவர். இதில் தெலுங்குபா ளையம் , செட்டிபாளையம் , சூலூர் பகுதிகளில் தலா இருவர், ஒண்டிபுதூர், பிஎன்பாளையம், பீளமேடு, வேலாண்டிபாளையம், காந்திபார்க், வடமதுரை, குனி யமுத்தூர், கரும்புகடை, ரத்தினபுரி, பொள்ளாச்சி, செல் வபுரம், செளரியபாளையம், ஆகிய பகுதிகளை சார்ந்த தலா ஒருவருக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது.

இதில் பீள மேடு பகுதியை சேர்ந்தவர் ஏழு நாட்களுக்கு முன்பு குஜராத்தில் இருந்தும், சூலூர் மற்றும் செட்டிபாளை யம் பகுதியை சேர்ந்தவர்கள் தில்லியில் இருந்தும், ரத்தினபுரியை சேர்ந்தவர் மும்பையில் இருந்தும் விமா னம் மூலம் வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கோவையில் மீண்டும் கொரோனா வைரசின் தாக் கம் அதிகரித்து வரும் நிலையில், தற்போது வரை கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனை என 100க்கும் மேற்பட்டோர் கொரோ னாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை ஒட்டுமொத்தமாக கோவை மாவட்டத்தில் மட்டும் 292 பேர் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர்.