கோவை, ஜூன் 18- கோவை ஆர்.ஜி.புதூர் பகுதியில் இதுவரை 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அப்பகுதி தனிமைப்ப டுத்தப்பட்டுள்ளது. தொற்று காரண மாக தனியார் மில் மூடப்பட்டுள்ளது கோவையில் கடந்த சில நாட்க ளாக கொரோனா பாதிப்புகள் அதிக ரித்து வருகிறது. புதனன்று மட்டும் 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இது கோவையில் பதிவான அதிகபட்ச பாதிப்பாகும். இதில் ஆர்.ஜி.புதூர் பகுதியில் மட்டும் 11 பேருக்கு தொற்று ஏற்பட்டது.
சென்னையில் இருந்து கோவை வந்த ஆர்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த 28வயது இளைஞர் கொரோனா தொற்றால் கடந்த 14 ஆம் தேதி உயிரிழந்ததார். இதைய டுத்து அப்பகுதியில் நடத்தப் பட்ட பரிசோதனையில் 39 முடிவு கள் வரப்பெற்றது. அதில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் அப் பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகு தியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அப்ப குதியில் உள்ள மளிகை மற்றும் காய்கறி கடைகள் அடைக்கப்பட் டுள்ளன. இதனிடையே உயிரிழந்த இளைஞரின் தாய் மற்றும் சகோதரர் பணியாற்றிய சின்னியம்பாளையம் பகுதியில் உள்ள சிஎன்வி ஸ்பின் னிங் மில்லிலும் கொரோனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து அந்த மில் மூடப்பட்டு, அங்கு பணியாற்றிய வர்கள் மற்றும் குடும்பத்தினர் தனி மைப்படுத்தப்பட்டுள்ளனர். ஆர்.ஜி. புதூர் பகுதியில் உள்ள 220 பேருக்கு ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு, மருத்துவப் பரிசோத னைக்கு அனுப்பப்பட்டுள்ளன. இந்நி லையில் வியாழனன்று மருத்துவ பரிசோதனை முடிவுகள் வெளி யாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.