tamilnadu

கோவையில் மேலும் இரண்டு காவலர்களுக்கு கொரோனா

கோவை, ஜூலை 31- கோவை மாவட்டம், அன்னூர் காவல் நிலையத் தில் பணிபுரியும் இரண்டு காவலர்களுக்கு கொரோனா தொற்று உறு தியாகியுள்ளது. கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. இதுவரை 4 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். காவல் துறையினரும் தொடர்ந்து கொரோனா பாதிப்புக்குள்ளாகி வரு கின்றனர்.

இந்நிலையில், அன்னூர் காவல் நிலையத் தில் பணிபுரியும் உதவி ஆய் வாளர் மற்றும் சிறப்பு பிரிவு தலைமை காவலர் ஆகியோ ருக்கு வியாழனன்று கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப் பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டனர். மேலும், உதவி ஆய்வாளரின் மனைவிக் கும் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து அன்னூர் காவல் நிலையம் மூடப்பட்டு, காவல் நிலை யத்திற்கு முன்பு அமைக்கப் பட்டுள்ள கூடாரத்தில் காவல் நிலையம் தற்காலிக மாக செயல்பட்டு வருகி றது.

;