tamilnadu

img

மருந்தக உரிமையாளர்களுக்கு கொரோனா பொள்ளாச்சி காவல் நிலைய சாலை மூடல்

பொள்ளாச்சி, ஜூலை. 2-  பொள்ளாச்சியில் தனியார் மருந்தக உரிமையாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், காவல் நிலைய சாலை கட்டுப்பாட்டு பகுதியாக மாற்றி சீல் வைக்கப்பட்டது. பொள்ளாச்சி காவல் நிலைய சாலையில் தனியார் மருந்தகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இக் கடை உரிமையாளருக்கு புதனன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைதொடர்ந்து அவ ரது தந்தை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனி மைப்படுத்தப்பட்டார். மேலும், வருவாய்த் துறையினர் காவல் நிலைய சாலையினை அடைத்து இருபுறமும் சீல் வைத்தனர்.

பின்னர் பாதிக்கப்பட்ட கடை உரிமையாளரை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு சிகிசைக்காக அனுப்பி வைத்தனர்.  இதேபோல், தஞ்சாவூரிலிருந்து பொள்ளாச்சி வழியாக வால்பாறை சென்று கொண்டிருந்த 7 பேரை அட்டகட்டி சோதனை சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 7 பேருக்கும் கொரோனோ உறுதியானதையடுத்து கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.