கோவை, ஜூன் 14- கோவையில் இன்று 5 பெண்கள் உட் பட 15 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரு கிறது. இன்று 5 பெண்கள் உட்பட 15 பேருக்கு கொரோனோ தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. மஸ்கட்லிருந்து கோவைக்கு விமானத்தில் வந்த செல்வபுரம், திருச்சி, மருதமலை, கன்னியாகுமரி பகுதிக ளைச் சேர்ந்த 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. சென்னையிலி ருந்து கோவைக்கு சாலை மார்க்கமாக வந்த கவுண்டம்பாளையம், சித்தாபுதூர், களப் பட்டி, சரவணம்பட்டி, பி.என்.பாளையம் பகுதிகளை சேர்ந்த 5 பேருக்கு, கருமத் தம்பட்டி சோதனை சாவடியில் பரிசோ தனை செய்ததில் கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதேபோல அரக் கோணத்திலிருந்து கோவைக்கு ரயிலில் வந்த ஒண்டிபுதூர், கவுண்டம்பாளையம், சர வணம்பட்டி, பாப்பம்பட்டி பிரிவு, சிறுமுகை பகுதிகளை சேர்ந்த 6 பேருக்கு கொரனோ தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட் டவர்கள் இஎஸ்ஐ மற்றும் தனியார் மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட் டுள்ளனர்.