கோவை, ஜூன் 16- கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த இரண்டு கர்ப்பிணி பெண்கள் உட்பட 11 பேர் குண மடைந்து வீடு திரும்பினர். கோவையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு கள் அதிகரித்து வருகிறது. இவர்களுக்கு கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கர்ப்பிணி பெண்கள் இருவர் உட்பட 11 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
தற்போது, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 54 பேர் இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரு கின்றனர். மேலும், இஎஸ்ஐ மருத்துவமனையில் கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்ற 309 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர் எனவும், ஒரு உயிரிழப்பு கூட அம் மருத்துவமனையில் நிகழவில்லை எனவும் இஎஸ்ஐ மருத் துவமனை முதல்வர் நிர்மலா தெரிவித்துள்ளார்.