tamilnadu

கொரோனா பாதிப்பு-  கோவை மாவட்டத்தில் 500ஐ கடந்தது

கோவை, ஜூன் 29 - கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த ஞாயி றன்று மட்டும் 46 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதில், கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் 23 வயது ஆண் பயிற்சி மருத்துவர் ஒருவ ரும், பீளமேடு பெரியார் காலனியில் மட்டும் 17 பேருக்கு  கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதேபோல், ஆடீஸ் வீதியில் 3 பேருக்கும், துடியலூர் முருகன் நகரில் 3 பேருக்கும், செல்வபுரம் ஹவுசிங் யூனிட்டில் 2 பேருக்கும், ராம நாதபுரம் ஒலம்பஸ் பகுதியில் 3 பேருக்கும், துடியலூர் ஜோதி புரம்  பகுதியில் இருவருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.  மேலும், போத்தனூர் செட்டிபாளையம், ஆர்.எஸ்.புரம், காங்கேயம்பாளையம், நேரு நகர், பன்னி மடை, கெம்பட்டி  காலனி, பீளமேடு ராஜன் நகர், பீளமேடு லட்சுமிபுரம், சேரன் மாநகர், இடையர்பாளையம், கோல்டு வின்ஸ், கவுண்டம்பா ளையம் பகுதிகளில் தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப் பட்டது. இந்நிலையில் திங்களன்று மேலும் 65 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை வட்டாரங்களில் கூறப்படுகிறது. இதன் மூலம் கோவை யில் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வர்களின் எண்ணிக்கை 500ஐ கடந்துள்ளது. ஒட்டுமொத்த மாக 520க்கும் மேற்பட்டோர் கொரோன தொற்றால் பாதிக் கப்பட்டுள்ளதால் கோவை மாநகர மக்களிடையே பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது.