tamilnadu

img

தொடர் மழையால் வீடுகளுக்குள் வெள்ளம் - மக்கள் கடும் அவதி

இளம்பிள்ளை, நவ. 9- இளம்பிள்ளை அருகே உள்ள சிவ தாபுரம் பகுதியில் கனமழையால் வீடு கள், பள்ளி மற்றும் தொழில் கூடங்க ளில் மழைநீர் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.  சேலம் மாவட்டத்தில் சில நாட்க ளாக பரவலாக மழை பெய்து வருகி றது. இந்நிலையில் வெள்ளியன்று இரவு கன மழை பெய்தது. இதனால் ஏற்காடு மலைப்பகுதியில் இருந்து வந்த வெள்ளத்தால் சேலத்தாம்பட்டி ஏரி நிரம்பியது. அந்த ஏரியிலிருந்து வெளியேறிய மழைநீர் நீரோடை பராமரிப்பு இல்லாததால் சிவதாபுரம்,  பனங்காடு, மெயன்தெரு, ஆண்டி பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 300க்கும் மேற்பட்ட வீடுகள், கடை கள், வெள்ளிக் கொலுசு பட்டறைகள்,  கோவில், பள்ளிக்கூடம் ஆகியவற்றில் மழை நீர் புகுந்தது.  இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.   இதையறிந்த சேலம் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வெங்கடாச் சலம் மற்றும் அரசு அதிகாரிகள் சிவ தாபுரம் - இளம்பிள்ளை செல்லும் பிரதான  சாலையில் மட்டும் பார்வை யிட்டு சென்றதால் பாதிக்கப்பட்ட  பொதுமக்கள்  அதிருப்தியடைந்தனர்.  மேலும், அரசு அதிகாரிகள் பாது காப்பு நடவடிக்கைகளை விரைந்து  மேற்கொண்டு பாதிக்கப்பட்டவர்க ளுக்கு உணவு, உடை உள்ளிட்ட  நிவா ரண உதவிகளை வழங்க வேண்டு மென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.