கோவை, ஜூலை 5 – கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, பொதுமக்கள் கூடும் இடங்களில் பறக்கும் படையினரால் மேற்கொள் ளப்பட்ட தொடர் ஆய்வில் சனியன்று மட்டும் ரூ. 78 ஆயி ரத்து 550 இதுவரை அபராதமாக பெறப்பட்டுள்ளதாக மாந கராட்சி ஆணையாளரும் தனி அலுவலருமான ஷ்ரவன் குமார் ஜடாவத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் தெரிவித்தா வது, கோவையில் கொரோனா வைரஸ் நோய்த் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக, மாநகராட்சி யின் 5 மண்டலங்களிலும் தனித்தனியே கண்காணிப்பு அலு வலர்கள் நியமிக்கப்பட்டு பொதுமக்கள் கூடும் இடங்கள் மற்றும் அனைத்து வகையான கடைகளில் பறக்கும் படை யினர் தினசரி கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றன.
மாநகராட்சியின் 5 மண்டலங்களிலும் பறக்கும் படை குழுவினர்கள் மூலம் சனியன்று மாநகராட்சிப் பகுதி களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், மேற்கு மண்ட லத்தில் 214 கடைகளில் ரூ.26 ஆயிரத்து 100ம், கிழக்கு மண் டலத்தில் 54 கடைகளில் ரூ.5 ஆயிரத்து 500ம், மத்திய மண்ட லத்தில் 55 கடைகளில் ரூ.15 ஆயிரத்து 800ம், வடக்கு மண்டலத்தில் 138 கடைகளில் ரூ.19 ஆயிரத்து 450ம், தெற்கு மண்டலத்தில் 164 கடைகளில் ரூ.11 ஆயிரத்து 700ம், முகக்கவசங்கள் அணியாமலும், வருகைப் பதிவேடு பேணப் படாமலும், கிருமிநாசினி மருந்துகள் பயன்படுத்தாமலும், தனிமனித இடைவெளியினை பின்பற்றாமலும் இயங்கிய 625 கடைகளுக்கு பறக்கும் படை அதிகாரிகளால் வசூலிக் கப்பட்டது என மொத்தம் ரூ.78 ஆயிரத்து 550 அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.