கோவை, ஆக.8- கோவையில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் முறையான வடிகால் வசதியில்லாததால் சாலையெங்கும் பெருவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதன் காரணமாக கோவை மாநகரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு மாநகரம் திணறியது. கோவை மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந் துள்ளது. கடந்த மூன்று நாட்களாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிக ளில் மழை பெய்து வருகிறது. மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிக ளான வால்பாறை, பூண்டி, சிறு வாணி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரு கிறது. இந்த மழையின் காரணமாக சிறுவாணி அணையின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. சிறுவாணி அடிவாரத்தில் 44 மி.மீ மழையும், அணைப்பகுதியில் 208மி.மீ மழையும் பதிவாகியுள் ளது. ஆகஸ்ட் 8 ஆம் தேதி (வியாழக் கிழமை) காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 28.21 அடி யாக இருந்தது. கோவை குற்றாலம் நான்காவது நாளாக மூடப்பட்டது. மேலும், கோவை மாவட்டத்தில் பல இடங்களில் தொடர்ந்து 4 வது நாளாக மழை பெய்தது. இதனால், அனைத்து குளங்களுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழையினால் நொய்யல் ஆற்றில் அதிகளவில் தண்ணீர் வரத்து இருந் தது. இதன் காரணமாக சித்திரைச் சாவடி அணைக்கட்டில் இருந்து புதுக்குளம், கொளரம்பதி, நரம்சம் பதி, கிருஷ்ணம்பதி, செல்வம்பதி, குமராசாமி உள்ளிட்ட குளங்க ளுக்கும், குனியமுத்தூர் கால் வாயில் இருந்து பேரூர் பெரிய குளம், செங்குளம், கங்கநாரயண சமுத்திரம், சொட்டையாண்டி குட்டை, குறிச்சி, உக்கடம், வெள்ள லூர் குளங்களுக்கும் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
குறிச்சி குளத்தின் மூன்று ஷட்டர்களில் இருந்தும் தண்ணீர் திறந்து விடப் பட்டுள்ளது. குளங்களுக்கு தண்ணீர் செல்லும் அளவு,வாய்கால்களில் உடைப்பு குறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். குளங் கள் வேகமாக நிரம்பி வருகின்றன. மாநகர் முழுவதும் மழை பெய்தது. மழையால், அவினாசி, திருச்சி, மேட்டுப்பாளையம் சாலைகளில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், கோவை மாவட்டத்தில் வியாழனன்று காலை வரை எடுத்த கணக்குப்படி 912.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது. கோவை விமான நிலையம் 7.8, மேட்டுப்பாளையம் 6, சின்கோனா 155, சின்னகல்லாறு 226, வால்பாறை 138, வால்பாறை தாலுகா 137, சோலையாறு 165, ஆழியாறு 16.4, சூலூர் 4, பொள் ளாச்சி 10, வேளாண் பல்கலைக் கழகம் 23.5, கோவை தெற்கு 23.6, என மொத்தம் 912.30 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மாவட்டத்தில் சாரசரியாக 65.16 மி.மீ மழை பதி வானது. கோவையில் அடுத்த சில நாட்க ளுக்கு மழை பெய்யும் எனவும், மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்ப தாகவும் காலநிலை ஆராய்ச்சியா ளர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று விடுமுறை
கோயம்புத்தூர் மாவட்டத்தில் தொடர் கனமழையின் காரணமாக அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கு.இராசாமணி அறிவித்துள்ளர்.