கோவை, ஆக. 8- கோவை ரயில் நிலையத்தின் பார்சல் அலுவலகம் இடிந்து விழுந்து விபத்தில் இருவர் பலியா கினர். கோவையில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டுள்ளது. இந்நிலை யில் கோவை ரயில் நிலையம் பின்புறம் பார்சல் அலுவலகம் வியாழனன்று அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. இதையடுத்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர் களை மீட்க ரயில் நிலைய காவல் துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினரும் தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கிய மூன்று பேரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதில், இடிபாடுகளில் சிக்கி பலத்த காயமடைந்த பவிளமணி (50), இப்ராகிம் (55) ஆகிய இரு சுமைப்பணி தொழிலாளர்கள் பரி தாபமாக உயிரிழந்தனர்.
மேலும் பார்சல் அலுவலகம் அருகே அமர்ந் திருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த ஊழியர் ராஜூ என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இந்நிலையில் உயிரிழந்த பவிள மணி, இப்ராகிம் ஆகியோர் குடும் பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும். இறந்து போன பவிள மணியின் மகனுக்கு வேலையும், மகளின் படிப்பு செலவையும் அரசே ஏற்க வேண்டும் என உடலை வாங்க மறுத்து மருத்து வமனையில் உற வினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் உரிய விண்ணப்பம் அளிக்கும்படியும் அரசிற்கு பரிந்துரை செய்வதாக உறுதி யளித்ததின் பேரில் உடலை வாங்கிச்சென்றனர். அதிகாலையில் பார்சல் அலு வலகம் இடிந்து விழுந்து இரண்டு சுமைப்பணி தொழிலாளர்கள் பலியான சம்பவம் கோவையில் பெரும் சோகத்தை ஏறப்டுத்தியுள் ளது.