கோவை. நவ.4- கோவையில் மேலும் ஒரு வாலிபர் ஆன்லைன் சூதாட் டத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கோவை போத்தனூர், அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன்(32). தனியார் நிறுவன ஊழிய ரான இவர் பெற்றோரை இழந்து உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், ஜெயச்சந்திரன் ஆன்லைனில் ரம்மி விளையாடி வந்ததில், பணத்தை தொடர்ந்து இழந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் கடன் தொல்லைக்கு ஆளான ஜெயச்சந்திரன் செவ்வாயன்று தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்த தகவலறிந்த வந்த காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.