tamilnadu

img

130 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பறிமுதல்

கோவை, டிச.31 – கோவையில் 130 கிலோ தடைசெய்யப்பட்ட புகை யிலை பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி கள் பறிமுதல் செய்தனர். கோவை மாநகர் தனிப்படை காவல் துறையினர் மற்றும் உணவு பாதுகாப்பு துறையினர்  இணைந்து புலியகுளம் பகுதியில் உள்ள சில்லறை விற்பனை கடைகள் மற்றும் குடோன்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் சண்முகா ஸ்டோர்ஸ் மற்றும் ஹரிஹரன் ஸ்டோர்ஸ் ஆகிய கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகை யிலை பொருட்கள் சுமார் 130  கிலோ பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டுள் ளது. இதன் மதிப்பு சுமார்  ரூ. 1.6 லட்சம் ஆகும். மேலும் 2 உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பகுப்பாய்விற்கு அனுப்பப் படுகிறது. பகுப்பாய்வின் முடிவில்  வழக்கு பதிவு செய்யப் படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

;