tamilnadu

img

கருத்தரிப்பு சிகிச்சை மற்றும் கரு தர சிகிச்சை நிபுணர்கள் மாநாடு

சேலம், செப்.29- சேலத்தில் இந்திய கருத்தரித்தல் சங்கம் தமிழ்நாடு  கிளை, சேலம் மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர்கள் சங்கம் இணைந்து நடத்திய கருத்தரிப்பு சிகிச்சை மற்றும் கரு தர சிகிச்சை நிபுணர்களுக்கான 6ஆவது மாநில மாநாடு ஞாயிறன்று சேலம் ஐந்து ரோடு உள்ள தனியார் நட்சத்திர விடுதி நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதிலும் இருந்து 300க்கும் மேற்பட்ட கருத்தரித்தல் சிகிச்சை நிபுணர்கள் மற்றும் கரு தர நிபுணர்கள் கலந்து கொண்டனர். மாநாடு குறித்து ஊடகங்களுக்கு பேட்டியளித்த மருத்துவர்கள் கூறும் பொழுது,”  இரண்டு நாட்களாக நடைபெற்ற கருத்தரித்தல் சிகிச்சை மற்றும் இதர மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில், கருத்தரித்தல் சிகிச்சையில்  ஏற்பட்டுள்ள முன் னேற்றம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழ் நாடு மட்டுமல்லாது, இந்திய அளவிலும், உலக  அளவிலும் கருத்தரித்தல் சிகிச்சையில் செய்ய வேண்டிய நவீன முறை மருத்துவம் குறித்து  நிபுணர்கள்  விளக்கம் அளித்தனர்.  மேலும் குறைந்த செலவில் கருத்தரித்தல் சிகிச் சையை பொதுமக்களுக்கு வழங்க வேண்டியதன் அவசியம் குறித்தும் மருத்துவ நிபுணர்கள் ஆலோ சனைகளை விளக்கமாக அளித்தனர். இந்த மாநாட்டில் தாய்லாந்து நாட்டில் இருந்து மருத்துவ  நிபுணர்கள் கலந்து கொண்டனர்.  இந்த மாநாட்டின்  மூலம் தருமபுரி பிஜிஆர் கருத்தரித்தல் மையத்தின்  கிளையை  மருத்துவர்  கெளரி தேவி துவங்கப்பட்டது”  என தெரிவித்தனர்.