கோவை, செப். 21- கோவை அரசு மருத்துவமனையில் லஞ்சப் புகார் கள் வருவதை தொடர்ந்து மருத்துவமனை பணியா ளர்களுக்கு நடத்த விதிமுறைக் கூட்டம் நடத் தப்பட உள்ளது. கோவையிலுள்ள அரசு தலைமை மருத்துவ மனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயா ளிகள் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிகிச்சைக் காக வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவ மனைக்கு சிகிச்சை பெற வருபவர்களிடமும், உள்நோயாளிகளாக மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்து வமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்தன. இந்த நிலையில், மருத்து வமனைக்கு வரும் நோயாளிகளிடம் நடந்துகொள்ளும் வழிமுறைகள் மற்றும் நடத்தை விதிமுறைகளை மருத்துவமனை பணியாளர்களிடையே விளக்கும் கூட்டம் வரும் திங்களன்று நடக்க உள்ளது. இதுகுறித்து மருத்துவமனையின் முதல்வர் அசோகன் கூறியதாவது: லஞ்சப் புகார்கள் பற்றி விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும் எனது தலை மையில் 8 பேர் கொண்ட குழு ஒன்று உருவாக்கப் பட்டுள்ளது. இந்த குழு மருத்துவமனையில் தொடர்ந்து ஆய்வு நடத்துவதுடன், 2 வாரங்களுக்கு ஒரு முறை லஞ்சப்புகார்களை அறிக்கையாக சமர்ப்பித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. கடந்த 20ம் தேதி லஞ்சம் வாங்கிய வினோத் என்பவர் பணியிட மாறு தல் செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் முதல் தற்போது வரை லஞ்ச புகாரின் பேரில் 6 பேர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். யாரேனும் லஞ்சம் கேட்டால் எங்களிடம் புகார் அளிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பணியாளர்கள் மத்தியில் அறி விக்கும் விதமாக நாளை மருத்துவ பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் உட்பட அனைத்து பணி யாளர்களுக்கும் நடத்தை விதிமுறை கூட்டம் நடத் தப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் நோயாளிகளிடம் நடந்து கொள்ளும் முறை குறித்தும், லஞ்சம் பெற் றால் எடுக்கப்படும் நடவடிக்கை குறித்தும் பணி யாளர்களிடம் விளக்கப்படும். இவ்வாறு மருத்துவ மனையின் முதல்வர் அசோகன் தெரிவித்துள்ளார்.