tamilnadu

img

தோழர் அசோக் நினைவு ரத்த தான முகாம் வாலிபர் சங்கம் சார்பில் 32 யூனிட் ரத்தம் வழங்கல்

பொள்ளாச்சி,  ஜூன் 7- பொள்ளாச்சியில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் தோழர் அசோக் நினைவு ரத்த தான முகாம் நடைபெற்றது. கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் நடத்தப்பட்ட ரத்த தான முகாமில், பொள்ளாச்சி அரசு மருத்துவமனை ரத்த வங்கிக்கு 32 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. இந்நிகழ்விற்கு வாலிபர் சங்கத்தின் கிளைச் செயலாளர் பாலமுருகன் தலைமை வகித் தார்.  முன்னதாக இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா செயலா ளர் மூ.அன்பரசன் துவக்கி வைத்தார். இதில், சங்கத்தின் கோவை மாவட்டச் செயலா ளர் கே.எஸ்.கனகராஜ், மாவட்டத் தலை வர் ஸ்டாலின் குமார்,  கோவை மாவட்ட  ரத்த தான கழக ஒருங்கிணைப்பா ளர் விவேகானந்தன், வாலிபர் சங்கத்தின் பொள்ளாச்சி தாலுகா தலைவர் கவிபாரதி, பொருளாளர் திலீபன் உள்ளிட்டோர் பங் கேற்றனர்.  இதில், திரளானோர் கலந்து கொண்டனர்.

;