பொள்ளாச்சி, அக்.19- அதிக வருவாய் ஈட்டச் சொல்லி பேருந்து நடத்துனரை நிர்பந்தித்து தற்கொலைக்கு தூண்டிய போக்கு வரத்து கழக அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி அனைத்து போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் திங்களன்று கோட்டூர் காவல் நிலை யத்தை முற்றுகையிட்டனர். கோவை மாவட்டம், பொள்ளாச் சியை அடுத்த கோட்டூர் சோமந்துறை சித்தூரைச் சேர்ந்தவர் சுப்ரமணியம் (31). இவர் பொள்ளாச்சி அரசு போக் குவரத்து கழகத்தின் பணிமனை கிளை 3 ல் நடத்துனராக பணியாற்றி வருகி றார். இவருக்கு சுமதி (28) என்ற மனைவியும், இரண்டு பெண் குழந்தை களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த வெள்ளியன்று காலை பொள்ளாச்சி பேருந்து நிலைய உதவி மேலாளர் ஜெயபிரகாஷ் மற்றும் தணிக்கை அலுவலர் ஸ்ரீதர் ஆகியோர், நடத்து னர் சுப்ரமணியத்தை சிறப்பு இயக்கம் மூலமாக அதிக பயணிகளை ஏற்றி வரு வாயினை அதிகப்படுத்த வேண்டு மென நிர்பந்தம் செய்து, தகாத வார்த் தைகளால் திட்டியதாக கூறப்படு கிறது. இதில் மனமுடைந்த நடத்துனர் சுப்ரமணியம், பூச்சிக்கொல்லி மருந்து அருந்தி தற்கொலைக்கு முயன்றுள் ளார்.
இதனைத்தொடர்ந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ள னர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக, அவரது மனைவி சுமதி கோட்டூர் காவல் நிலையத்தில், வெள்ளியன்று புகார் அளித்துள்ளார். ஆனால், இதுவரை சம்மந்தபட்ட அதி காரிகள் மீது எந்தவொரு நடவடிக்கை யும் எடுக்கவில்லை. இதையடுத்து சம் மந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திங்க ளன்று போக்குவரத்து கழக அனைத்து தொழிற்சங்கத்தின் கூட்டமைப்பினர் கோட்டூர் காவல் நிலையத்தை முற்று கையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.
இதனையடுத்து, கோட்டூர் காவல் நிலைய அதிகாரிகள், போராட்டத் தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். இதில் பொள் ளாச்சி காவல் மாவட்ட துணை கண் காணிப்பாளரிடம் ஆலோசனை செய்த பின்னர் முதல் தகவலறிக்கை பதியப்படும் என உறுதியளித்தனர். இதனையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக, இப்போராட்டத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்க (சிஐடியு) கோவை மாவட்ட பொதுச்செயலாளர் வேளாங்கண்ணி ராஜ், மாநில துணை பொதுச்செயலா ளர் எம்.கனகராஜ், சிபிஎம் ஆனை மலை தாலுகா செயலாளர் வி.எஸ்.பரமசிவம், ஏஐடியுசி சண்முகம், ஐஎன் டியுசி, எல்பிஎப், எம்எல்எப், ஏஏஎல்எப், எச்எம்எஸ் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கத்தின் நிர்வாகிகள் உட் பட ஏராளமானோர் கலந்து கொண்ட னர்.