கோவை, மார்ச் 9 - சாகித்ய அகாதமி விருதுபெற்ற சூல் நாவல் ஆசிரியர் சோ.தர்மனுக்கு கோவையில் ஞாயிறன்று பாராட்டு விழா நடைபெற்றது. கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட் பக் கல்லூரியில், விஜயா பதிப்பகத் தின் சார்பில் சூல் நாவல் ஆசிரியர் சோ.தர்மனுக்கு பாராட்டு விழா நடை பெற்றது. இப்பாராட்டு நிகழ்விற்கு மதுரை காமராசர் பல்கலைக்கழக அஞ்சல் வழி கல்வி இயக்ககத்தின் ஓய்வு பெற்ற தமிழ்த் துறைத் தலை வர் மீனாட்சி பாரதி தலைமை வகித் பேசுகையில், சூல் நாவலின் கதை, கதையிலுள்ள பாத்திரங்கள், கதையை நகர்த்தும் விதங்கள் என அனைத்திலும் தனித்தன்மை வாய்ந்ததாக உள்ளது. சூல் என்ற தலைப்பே ஆற்றல் புதைந்திருக்கும் இடத்தை குறிப்பதாகும். சிறப்பாக இருக்கும் கண்மாய், ஊர், இனம், பண்பாடு ஆகியவற்றையும், ஒரு தொலைந்த ஊரின் நிலை ஆகியவற் றையும் மிகச் சிறப்பாக விவரித்துள் ளார். கதையில் வரும் பாத்திரங்கள் அனைத்தும் போலித்தனம் இல்லா மல் இயல்பாக இருப்பதால் கதை யோடு ஒன்றிவிட முடிகிறது. பகுத்தறி வுக்கு முன் விவசாயிகளின் நுண்ண றிவு எவ்விதத்திலும் சளைத்த தில்லை என்பதை மிக அழகாக குறிப் பிட்டுள்ளார். விறு, விறுப்பிற்கும், ஆர்வத்திற்கும் கொஞ்சமும் பஞ்சமில் லாமல் அரிவாள், மண் வெட்டி, கலப்பை போன்ற நூற்றுக்கணக்கான வட்டார வழக்கு சொற்களைப் பயன்படுத்தி சொற்குவியலை உரு வாக்கியுள்ளார். கதையோடு ஒன்றி னாலும் பாத்திரங்களின் தன்மைக் குறித்து நம்மை வாசகர்களை யோசிக்க வைத்துள்ளார், என்றார். இதனைத்தொடர்ந்து நடப் பாண்டு சாகித்ய அகாதெமி விருது பெற்ற சூல் நாவல் ஆசிரியர் சோ.தர்மனுக்கு விஜயா பதிப்பக உரி மையாளர் மு.வேலாயுதம் பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். நிகழ்ச்சி யில் பி.எஸ்.ஜி. கலை அறிவியல் கல்லூரி தமிழ்த் துறை பேராசிரியர் ராம ராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண் டனர்.