மாவட்ட நிர்வாகம் அலட்சியம் - ஒருங்கிணைப்பு இல்லை
தேனி, மே 15- தேனி மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை 34 ஆக அதி கரித்துள்ளது. தேனி மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியத்தாலும், ஒருங்கிணைப்பு இல்லாததால் ஓடைப்பட்டி கிராமத்தி லும் கொரோனா தொற்று சமூக பரவ லாக பரவிவருகிறது.
தேனி மாவட்டத்தில் ஏப்ரல் 17 ஆம் தேதி வரை கொரோனா தோற்று 43 பேருக்கு உறுதிசெய்யப்பட்டு தேனி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் போடியை சேர்ந்த பெண் ஒருவர் மரணமடைந்தார். எஞ் சிய 42 பேர் பூரண குணம் பெற்று வீடு திரும்பியதாக அறிவிக்கப்பட்டது. மே மாதம் 2 ஆம் தேதி முதல் 13 ஆம் தேதிவரை 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரு கிறார்கள். இவர்களில் பெரும்பாலும் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டி லிருந்து வந்தவர்கள், அவர்களின் தொடர்பில் இருப்பவர்கள் ஆகும். தேனி மாவட்டம் ஓடைப்பட்டி, கே.கே.பட்டி, சுருளிப்பட்டி, ஆண்டி பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதி களில் திராட்சை, வாழை சாகுபடி செய்யப்பட்டு, சென்னை கோயம் பேடுக்கு அனுப்பி வருகிறார்கள். ஓடைப்பட்டி பேரூராட்சியை சேர்ந்த ஓட்டுநர் சென்னை கோயம்பேடு சந்தைக்கு சென்று திரும்பியுள்ளார். அப்போது சமூக ஆர்வலர்கள் மே 4 ஆம் தேதி அவர் வந்த விபரத்தை தெரிவித்து உரிய மருத்துவ பரி சோதனை செய்யவேண்டும் என சம் பந்தப்பட்ட அலுவலருக்கு செல்பேசி யில் தகவலும், புகாரும் தெரிவித்துள் ளனர். அதன் பிறகு அவருக்கு அன்று இரவு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு தொற்று உறுதி செய்யப்பட்டு கடந்த 8 ஆம் தேதி மாநில சுகாதார துறை, மாவட்ட ஆட்சியரால் அறிவிக்கப்பட்டது.
அந்த நான்கு நாட்களுக்குள் கொரோனா தோற்று சமூக பரவலாகி விட்டது. தேனி அரசு மருத்துவ கல்லூரி யில் சிகிச்சை பெற்று வரும் 28 பேரில் 12 பேர் ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கள். இவர்கள் லாரி ஓட்டுனரின் உற வினர்கள், அவர்களோடு தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். வியாழனன்று மேலும் ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளியன்று மேலும் இருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே இதே ஊரை சேர்ந்த லாரி ஓட்டுநர், மேற்படி ஓட்டுநர் கொடுத்த தகவல் படி பரி சோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் பரவ வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை உள்ளிட்ட கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி களிலிருத்து வருபவர்களுக்கு மாவட்ட எல்லையில் கொரோனா பரி சோதனை மேற்கொண்டிருந்தால் கொரோனா தொற்று சமூக பரவலா வது தடுக்கப்பட்டிருக்கும். சிவப்பு மண்டலம் மற்றும் வெளி மாநில தொடர்பில் இருப்பவர்கள் சம் பந்தப்பட்ட மாவட்டத்திற்கு வந்தால் முறைப்படி கொரோனா தொற்று தொடர்பாக சோதனை செய்து, அவர் களை குறைந்தது 15 நாட்களாவது தனிமைப்படுத்தி வைத்து கண்கா ணிக்க வேண்டும் என இந்திய மருத் துவ கழகம் மாநில அரசுகளுக்கு வழி காட்டியுள்ளது. இதை மாவட்ட நிர்வா கம் அலட்சியம் செய்ததால் கொத்து கொத்தாக கொரோனா பரவியுள்ளது.
ஒருங்கிணைப்பு இல்லை
வெளி மாவட்டத்திலிருந்து தேனிக்கு வந்தவர்களுக்கு சோதனை செய்யப்பட்டு ஆண்டிபட்டி அருகே தனியார் பொறியியல் கல்லூரி தங்கி முடிவுக்காக காத்திருக்க வைக்கப் பட்டனர். அவர்களுக்கு கொரோனா தோற்று இல்லை என அறிவிக்கப் பட்டு இரவு 8 மணிக்கு வெளியேற் றப்பட்டனர். கம்பம் பகுதியை சேர்ந்த அவர்கள் செய்வதறியாது ஆண்டி பட்டியை நோக்கி நடந்து வந்தனர். அவர்கள் காவல் சோதனை சாவடி அருகே வந்த போது அவர்களை விசா ரணை செய்த காவலர்கள், ஆண்டி பட்டி துணை கண்காணிப்பாளருக்கு தகவல் தெரிவித்தனர். அவர் வாகனங் களை ஏற்பாடு செய்து அனுப்பி வைத் தார். இது தொடர்பாக வருவாய் துறை அதிகாரியிடம் கேட்ட போது, சுகாதா ரத்துறையினர் விடுவித்தது பற்றி எங்களுக்கு தகவல் தெரிவிக்க வில்லை என்றனர்.
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட வர்கள் விதியை மீறி சுற்றியதாக மாவட்ட ஆட்சியர் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் 9 பேர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் முரண்பட்ட தக வலை பத்திரிகைக்கு தெரிவித்துள்ள னர். இதிலிருந்து துறைகள் ஒருங்கி ணைந்து செயல்படவில்லை என்பது தெளிவாக தெரியவருகிறது. கொரோனா தொற்று இருப்பதை 6 மணி நேரத்தில் உறுதி செய்யலாம் என்ற அறிவிப்புக்கு முரணாக 3 நாட்க ளுக்கு மேல் தாமதமாகிறது. நோய் தோற்று உறுதி செய்யப்பட்டவுடன் உடனடியாக அடிப்படை பணிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும்.
முத்துலாபுரத்தில் 4 பேருக்கு கொரோனா
முத்துலாபுரத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய் யப்பட்டுள்ளது. முத்துலாபுரத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னையில் இலவச அமரர் ஊர்தி ஓட்டுநராக பணி புரி கிறார். அவர் அண்மையில் முத்துலா புரத்துக்கு வந்து சென்றிருக்கிறார். பின்னர் மதுரைக்கு அவரது வீட்டுக்கு கொரோனா சோதனை செய்யப்பட்ட போது அவருக்கு தொற்று ஏற்பட்டுள் ளது உறுதியானது. இதையடுத்து முத்துலாபுரத்தில் அம்மா, அப்பா, அண்ணன், குழந்தை ஆகிய 4 பேருக்கும் கொரோனா சோதனை செய்தபோது அவர்களுக் கும் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி யானது. (ந.நி)