tamilnadu

img

சேலம் சட்டக் கல்லூரி வளாகத்தில் சமரச மையம் துவக்கம்

சேலம், டிச. 6- சேலம் மத்திய சட்டக் கல் லூரி வளாகத்தில் சமரச மற்றும் நடுவர் மையம் துவக்கி வைக்கப் பட்டுள்ளது. சேலம் மத்திய சட்டக் கல்லூரி வளாகத்தில் சமரச மற்றும் நடுவர் மையத்தின் (CEMA – WE SOLVE) துவக்கவிழா ஞாயிறன்று நடை பெற்றது.இவ்விழாவிற்கு தமிழ் நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலின் இணைத் தலைவரும், சட்டக் கல்லூரியின் செயலாள ரும், அங்கீகாரம் பெற்ற சமரசத் தீர்வு வல்லுனருமான வழக்கறி ஞர் த.சரவணன் தலைமையேற்று உரையாற்றினார். அப்போது, நாட்டிலேயே கல்வி நிறுவனம் ஒன்றில் அதுவும்  சட்டக்கல்லூரி யில் இத்தகைய சமரச மையம் அமைந்திருப்பது இதுவே முதல் முறை என்று பெருமிதத்தோடு கூறினார்.  இதைத்தொடர்ந்து, இவ்விழா வில் உச்சநீதிமன்ற முன்னாள்  நீதி யரசர் பக்கீர் முகமது இப்ராகிம் கலிபுல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில், தற் போது சமரச மற்றும் நடுவர் தீர்வு மையங்கள் மேலை நாடுகளில் பிரபலமடைந்து வருகிறது. இந்தி யாவில் தற்போதுதான் இந்த முறை வளர்ந்து வருகிறது. பல்வேறு சிக்கலான வழக்குகள், குறிப்பாக குடும்ப உறவுகள் மற்றும் சொத்து  பாகப்பிரிவினை வழக்குகள் போன்றவை இந்த சமரசத் தீர்வு முறையில்  மிகவும் எளிதான வழியிலும், அதிகப் பொருள் செலவு இல்லாமலும்  மற்றும் மிகவும் குறைவான காலத் திலும்  தீர்த்து வைக்க உதவுகிறது. சில வழக்குகள் பல ஆண்டுகளாக நீதிமன்றங்களில்  இழுத்தடிக்கப் பட்ட நிலையில் இறுதியாக  இந்த’ சமரசத் தீர்வு முறையை நாடி சுமூ கமாக  தீர்த்துக் கொண்ட அனுப வங்களைக் எடுத்துரைத்தார்.

இதையடுத்து சர்வதேச சமரசத்  தீர்வு நிபுணரும், மூத்த வழக்க றிஞருமான ஸ்ரீராம் பஞ்சு சிறப்பு ரையாற்றி பேசுகையில், சமரசத் தீர்வு மையங்களின் இன்றைய இன்றியமையாத தன்மைப்பற்றி விளக்கிய அவர், இதுவரையில்  தான் பார்த்த எத்தனையோ சமரசத் தீர்வு மையங்களிலேயே சேலம் மத்திய சட்டக்கல்லூரியில் அமைத்துள்ள இந்த CEMA சமரசத்  தீர்வு மையமே அதன்  உள்கட்டமைப்பிலும், வசதிகளி லும் மிகவும் அற்புதமாக அமைந் துள்ளது என குறிப்பிட்டார். இதேபோல், இந்தியன் இன்ஸ் டிட்யூட் ஆஃப் ஆர்பிட்ரேசன் அன்ட் மீடியேசன்(IIAM) தலைவர் அனில் சேவியர்,இயக்குனர்  இராம் மஜீத், சர்வதேச சமரசத் தீர்வு நிபுணர் இன்ப விஜயன் ஆகி யோர் பேசினர். இதைத்தொ டர்ந்து,சேலம் சென்ட்ரல் சட்டக்  கல்லூரியின்  சமரசத் தீர்வு மையத் திற்கு, இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஆர்பிட்ரேசன் அன்ட் மீடி யேசன்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெ ழுத்தானது. இவ்விழாவில் சேலம் மாவட்ட முதன்மை நீதிபதியும், மாவட்டச் சட்டப்பணிகள் ஆணை குழுவின் தலைவருமான  குமரகுரு, கூடு தல் மாவட்ட நீதிபதி, சிபிஐ வழக்குகளுக்கான சிறப்பு நீதி மன்ற நீதிபதி எல்.எஸ்.சத்திய மூர்த்தி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஆபிரகாம் லிங்கன், மாவட்ட நீதி பதியும், நிரந்தர மக்கள் நீதி மன்றத் தலைவருமான குணவதி, குடும்பநல நீதிமன்ற மாவட்ட நீதிபதி பத்மா உள்ளிட்ட பல் வேறு மாவட்டங்களை சார்ந்த நீதிபதிகள், பேராசிரியர்கள், சட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;