கோவை, டிச. 24 – உழைக்கும் மக்களை வர்ணமாக பிரிக்கும் சனாதானத்தை வீழ்த்தி சமூக நீதியை காக்க பெரியார் கொள்கைகள் உடன் நிற்கும் என தந்தை பெரியார் நினைவு நாள் உறுதியேற்கப்பட்டது. கோவையில் மக்கள் ஒற்றுமை மேடை, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் தந்தை பெரியாரின் 46ஆவது நினைவு நாள் செவ்வாயன்று கோவை புலியகுளம் பகுதியில் எழுச்சியோடு அனு சரிக்கப்பட்டது. சிஐடியு மாவட்ட செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் சி.பத்மநாபன், தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஆறுச் சாமி, மாதர் சங்க கிழக்கு நகர செயலாளர் வனஜா நடராஜன் ஆகியோர் பெரியார் நினைவு தின உரையாற்றினர். முன்னதாக, தந்தை பெரியார் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து சனாதனத்தை வீழ்த்துவோம், சமூக நீதியை காப்போம், உழைக்கும் மக்களை பிரிக்கும் குடியுரிமை சட்டத்திற்கு எதிரான போராட் டத்தை தீவிரப்படுத்துவோம் என்கிற உறுதிமொழி ஏற்றனர்.