tamilnadu

img

தோழர் கே.ரமணியின் நினைவேந்தல் அனுசரிப்பு

கோவை, மே 30- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் முதுபெரும் தலைவரும், இந்திய தொழிற்சங்க மையத்தின் (சிஐடியு) முன்னோடியுமான தோழர் கே.ரமணி அவர்களின் 14 ஆம் ஆண்டு நினைவு தினம் சனியன்று அனுசரிக்கப்பட்டது.  மார்க்சிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக்குழு அலு வலகத்தில் நடைபெற்ற நினை வேந்தல் நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர். நடராஜன், சி.பி.எம் கட்சியின் மாவட்டசெயலாளர் வி.ராம மூர்த்தி, மாநிலக்குழு உறுப்பி னர் சி.பத்மநாபன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.ஜெயபாலன் மற்றும் யு.கே.சிவஞானம் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.  இதேபோல் கோவையின் பல் வேறு பகுதியில் சிஐடியு, சிபி எம் சார்பில் கே.ரமணியின் நினைவேந்தல் நிகழ்வு அனுசரிக் கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஈரோடு

இதேபோல், ஈரோடு மாவட் டத்தின் பல்வேறு இடங்களில் தோழர் கே.ரமணி அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் ஆர். ரகு ராமன், மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் ப.மாரிமுத்து, சி. பரமசிவம், ஆர்.கோமதி, மாவட்ட குழு உறுப்பினர்கள் இரா.திருத் தணிகாசலம், ஆ.சகாதேவன் உள் ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.