tamilnadu

img

வருவாயில் புதிய உச்சத்தை தொட்டது கோவை போக்குவரத்து கழகம் தீபாவளி நாளையொட்டி  ரூ.641.29 லட்சம் கட்டண வசூல்

 கோவை, அக். 29-  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்து கள் இயக்கத்தில் உச்சபட்ச வருவாயை கோவை கோட்ட போக்குவரத்து கழகம் எட்டியுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தின் கோவை கோட்டத்திற்குட்பட்ட கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் ஆகிய மாவட்டங்கள் அடங்கும். இக்கோட் டத்திற்குட்பட்ட அரசு சிறப்பு பேருந்துகள் தீபாவளி பண்டிகையான ஞாயிறன்று இயக்கப்பட்டன. இதன்மூலம் இதுவரையில் இல்லாத வகையில் அதிகபட்சமான வருவாயை பெருக்கி சாதனை புரிந் துள்ளது. கடந்த காலங்களில் கோவை கோட்டத் தில் அதிகபட்ச வருவாய் குறிப்பாக, 2019 ஆம் ஆண்டு  ஜனவரி மாதம் 21 ஆம்தேதி 614.69 லட்சம் ரூபாய் வருவாய் ஈட்டியிருந்தது. தை பொங்கல் விழாவை யொட்டி தொடர் விடுமுறை முடிந்து திங்கட்கிழமை யன்று இயக்கப்பட்ட அரசு போக்குவரத்தில் இந்த இலக்கு எட்டப்பட்டது. இந்நிலையில் தீபாவளியையொட்டி தற்போது (அக்.27) 641.29 லட்சம் ரூபாய் வருவாய் என்கிற புதிய இலக்கை எட்டியுள்ளது. இக்கோட்டத்திற் குட்பட்ட கோவை மண்டலத்தில் 244.82 இலட்சம் ரூபா யும், ஈரோடு மண்டலத்தில் 178.79 லட்சம் ரூபாயும், திருப்பூர் மண்டலம் 148.76 லட்சம் ருபாய் என வருவாய் ஈட்டியுள்ளது.  இதுகுறித்து அரசு போக்குவரத்து கோவை கோட்ட மேலாளர் அன்பு ஆபிரகாம் விடுத்துள்ள அறிக்கையில், அரசு போக்குவரத்து கோவை கோட் டத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு உயர்ந்தபட்ச வருவாயை பெருக்கி சாதனை புரிந்திட உழைத்த அனைத்து ஓட்டுநர்கள், நடத்துனர்கள், தொழில் நுட்ப பணியாளர்கள் மற்றும் அலுவலக பணியாளர் கள், மேற்பார்வையாளர்கள், கிளை மேலாளர்கள், அனைத்து தொழிற்சங்க பொறுப்பாளர்கள் அனை வருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். மேலும், இது போன்று எல்லா விழாக்காலங்களிலும் முனைப்புடன் பணியாற்றி பயனிகளுக்கு நல்ல சேவையையும், கழகத்திற்கு அதிகபட்ச வருவாயையும் ஈட்டித்தர வேண்டும் என அறிக்கையில் தெரிவித்துள்ளார்.