இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் செப்.13ல் கோவை மாவட்ட தொழில் பாதுகாப்பு மாநாடு
கோவை, செப்.8- நெருக்கடியில் சிக்கித்திணறும் தொழிற்துறையை மீட்டெடுக்கும் முயற்சியாக இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) சார்பில் கோவை மாவட்ட தொழில் பாதுகாப்பு மாநாடு செப்.13 ஆம் தேதியன்று நடைபெறுகிறது. அரசின் எவ்வித உதவியுமின்றி சுயமாக கோவை தொழில்கள் தலை நிமிர்ந்து நிற்கிறது. இத்தொழில்கள் பல லட்சக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளித்து வாழ்வ ழித்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக மத்திய ஆட்சியாளர்களின் கொள்கையின் விளைவாக தொழிற்துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டு வரு கிறது. பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட நடவடிக்கைகளால் மேலும் இந்நெருக்கடி தீவிரமாகி யுள்ளது. இதனால் லட்சக்கணக் கான தொழிலாளர்களின் வாழ்வா தாரம் கேள்விக்குறியாகியுள்ளது. ஆகவே, தொழிற்துறையினர் எதிர்கொண்டுள்ள இப்பிரச்சனை களை அரசின் கவனத்திற்கு எடுத் துச்செல்லும் வகையில் இந்திய தொழிற்சங்க மையம் (சிஐடியு) கோவை மாவட்ட தொழில் பாது காப்பு மாநாடு செப்டம்பர் 13 ஆம் தேதியன்று காளப்பட்டி சாலை யில் உள்ள கோவை சுகுனா ஆடிட் டோரியத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கோவை தொழில் வர்த்தக சபை, கொடிசியா, சைமா, சீமா, கோப்மா, பவுண்டரி போன்ற அமைப்புகளின் நிர்வாகி கள் மற்றும் பொருளாதார அறி ஞர்கள் பங்கேற்று கருத்துக்களை பகிர்ந்திட உள்ளனர். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் காந்திபுரம் கமலம்துரை சாமி திருமண மண்டபத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. சிஐடியு மாவட்ட தலைவர் சி.பத்ம நாபன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை நாடாளு மன்ற உறுப்பினர் பி.ஆர்.நடரா ஜன், சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, பொருளா ளர் ஆர்.வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பல்வேறு தொழிற்துறையை சார்ந்த ஏராளமா னோர் பங்கேற்றனர்.