tamilnadu

img

எளியோரிடம் பணம் பறிக்கும் கோவை மாநகராட்சி

கடுமையான சொத்துவரி உயர்வுக்கு சிபிஎம், சிஐடியு கண்டனம்

கோவை, ஜூலை 31–  உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடைபெறவில்லை. தேர்ந் தெடுக்கப்பட்ட மன்றம் இல்லாத நிலையில் அதிகாரிகள் பல மடங்கு சொத்துவரியை உயர்த்தி முன்தேதி யிட்டு பணம் பறிக்கும் செயலுக்கு சிபிஎம், சிஐடியு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் அனைத்து மாவட் டங்களுக்கு 1998 ஆம் ஆண்டு சொத்து வரி உயர்த்தப்பட்டது.  இதனை யடுத்து பத்து ஆண்டுகள் கழித்து சென்னையை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் 2008-ல் சொத்து வரி உயர்தப்பட்டது.  ஆனால், 20  ஆண்டுகளாக சென்னைக்கு சொத்து வரி உயர்த்தப்படவில்லை. இதனை யடுத்து சென்னைக்கு விரைவில் சொத்து வரி உயர்த்த  வேண்டும் என 2018ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. ஆனால், சென்னைக்கு மட்டும் உயர்த்தாமல் அனைத்து மாவட்டங்களுக்கும் சேர்த்தே சொத்து வரி கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. குறிப்பாக, இந்த வரி உயர்வு 1998 ஆம் ஆண்டில் இருந்த சொத்து வரியை அடிப்படை யாக வைத்து சென்னைக்கும், 2008 ஆம் ஆண்டு இருந்த சொத்து வரியை அடிப்படையாக வைத்து கோவை உள்ளிட்ட பிற மாவட்டங்களுக்கும் மேற்கொள்ளப்பட்டதால் பலத்த எதிர்ப்புகள் எழுந்தன.   இந்நிலையில்,  கோவையில் உள்ள வீடுகள் மற்றும் வணிக நிறு வனங்களில் சொத்துவரி  உயர்த்தப் பட்டு சமீபத்தில்  கோயம்புத்தூர் மாந கராட்சி சார்பாக வீடு, வீடாக நோட் டீஸ் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும், இந்த வரி உயர்வு  கடந்த 2018 ஆம் ஆண்டு  ஏப்ரல் முதலே  அமலுக்கு வந்துள்ளதாகவும், முன் தேதியிட்டு வரித்தொகையை கட்ட வேண்டும் என்று கோவை மாநகராட்சி  மக் களை பேரதிர்ச்சியில் தள்ளியிருக் கிறது.  2008ம் ஆண்டிலிருந்தே சென் னையை விட கூடுதல் வரியை கோவை மக்கள் செலுத்திக் கொண்டி ருக்கிறார்கள். ஆனால், சென்னை யின் உள்கட்டமைப்பு வசதிகளுக்கு ஒதுக்கப்படும் நிதிபோல் கோவைக்கு ஒதுக்கப்படுவதில்லை என்பது ஒருபுறமிருக்க, போதிய அடிப்படை வசதிகள்கூட செய்துதாரத நிலையில் சென்னையைவிட கோவைக்கு அதிக வரி என்பது எவ்விதத்திலும் ஏற்க முடியாது என பொதுமக்கள் மத்தி யில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட் டுள்ளது.  குறிப்பாக, சென்னைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரி என்றால் கோவை உள்ளிட்ட மற்ற மாவட்டங்களுக்கு 40 ஆயிரம் ரூபாய் என்பது எந்தவகை யில் நியாயம் என்கிற கேள்விக்கு அதிகாரிகளிடத்தில் எந்த பதிலும் இல்லை. இதில் வீடுகளுக்கு 50 சதவி கிதமும், தொழிற்சாலைகளுக்கு 100 சதவிகிதமும், மருத்துவமனை, வணிக நிறுவனம், நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட இதர கட்டிங்களுக்கு 150 சதவிகிதமும் சொத்துவரி உயர்த்தப் பட்டிருக்கிறது. ஆகவே, இந்த வரி  விதிப்பை உடனடியாக  மாற்றி அமைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். 

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப் பதாவது, இந்த உயர்த்தப்பட்ட வரி கடந்த 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் அமலுக்கு வந்துவிட்டதாகச் சொல்லி  இப்போது  முன் தேதியிட்டு வரி வசூல்  செய்வது எவ்வகையிலும் நியாய மற்றது. மக்களிடம் கருத்துக்களை கேட்காமல் இதனை அமல்படுத்த கூடாது. ஏற்கனவே ஜிஎஸ்டி வரி  விதிப்பில் சிக்கி தவிக்கும் கோவை யில் உள்ள சிறு, குறு  தொழில் நிறுவ னங்களுக்கு 100 சதவிகித சொத்து வரி உயர்வு என்பது கடுமையான தொழில் நெருக்கடியை ஏற்படுத்தும்.   ஆகவே, தற்போது விதிக்கப்பட் டுள்ள வரி உயர்வை ரத்து செய்ய  வேண்டும். உள்ளாட்சி அமைப்புக ளுக்கான தேர்தல் நடைபெற்று தேர்ந் தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் கள் விவாதித்து மக்களின் நிலையை அறிந்து வரி நிர்ணயிப்பு செய்ய வேண்டும். இதனை விடுத்து குடிநீர் இணைப்பை துண்டிப்போம், மின் இணைப்பை துண்டிப்போம் என்கிற அறிவிப்பை செய்து, மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி அதிகாரிகள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி வரி வசூல் செய்ய முயற்சித்தால் மார்க்சிஸ்ட் கட்சி மக்களை திரட்டி கோவை மாநகராட்சிக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபடும் என்றார்.  இதேபோல், இந்திய தொழிற் சங்க மையம் (சிஐடியு) மாவட்ட தலைவரும், கோவை மாநகராட்சி வடக்கு மண்டல முன்னாள் தலைவரு மான சி.பத்மநாபன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழகத்தின் உள்ளாட்சி வரலாற்றில் இல்லாத அளவிற்கு தற்போது வரி  உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த காலத் தில் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை வரி உயர்வு என்பது இருக்கும். அது வும் சொத்துவரி என்பது ஐந்து சதவிகிதத்தில் இருந்து பத்து சதவி கிதம் வரை மட்டுமே உயர்த்தப்ப டும். முதன்முறையாக தேர்ந்தெடுக் கப்பட்ட மன்றங்கள் ஏதும் இல்லாத போது, அரசாணைகளின் மூலமாக இப்படிபட்ட வரி உயர்வு நிர்ணயித்தி ருப்பது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். 

மேலும், 2019 ஜனவரி மாதம் ஒருவர் வீடு கட்டி வரி போட்டிருந் தாலும், தற்போது 50 சதவிகிதம் வரி உயர்வோடு சேர்த்துக் கட்ட வேண் டும் என்பது எந்த விதத்திலும் ஏற்கக் கூடியதல்ல. இது பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். உள்ளாட்சி அமைப்புகளை பன்னாட்டு நிறுவ னங்களுக்கும், பெரு நிறுவனங்க ளுக்கும் தாரைவார்த்ததின் விளைவு, அனைத்து வகையிலும் மக்களை கொள்ளையடிப்பதற்கு, பணம் பறிப் பதற்கு ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதையே உள்ளாட்சி அமைப்புகள் செய்கிறது. வணிக வரியில், வருமான வரியில் எந்த மாற்றங்களும் செய்யப் படுவதில்லை. ஜிஎஸ்டியில்கூட திரும்பத் திரும்ப மாற்றி அமைக் கப்பட்டு குறைக்கப்படுகிறது. ஆனால் சாதாரண மக்கள் வீடுகட்டி  வாழ்ந்தால் அவர்களிடம் பணத்தை பறிக்கும் நடவடிக்கையை ஒருபோ தும் ஏற்கமுடியாது. இந்த மாநகரத் தில் விளாங்குறிச்சி கிராம ஊராட்சி, சங்கனூர் கணபதி பேரூ ராட்சி இம்மாநகரத்தோடு இணைக் கப்பட்டபோது, பழைய நகரத்திற்கு இணைக்கப்பட்ட பகுதிகளில் 20 ஆண்டுகளாக வரிவிதிப்பில் மாறுதல் இருந்து வருகிறது. மூன்றா வது இணைக்கப்பட்ட சின்ன வேடம்பட்டி, சரவணம்பட்டி, கவுண் டம்பாளையம் உள்ளிட்ட 9 பேரூ ராட்சிகளிலும் வளர்ச்சி என்பது தொடக்க நிலையைக் கூட  எட்டிப் பார்க்கவில்லை. இரண்டாவதாக இணைக்கப்பட்ட பகுதியில் கொள்கை அளவில்கூட வரிவிதிப்பு  குறித்து எந்த முடிவும் எடுக்கப்பட வில்லை. இப்படியிருக்க புதிய வரி விதிப்பு இப்பகுதியினருக்கு பெரும் சுமையாக மாறும். மக்களை கடுமை யாக பாதிக்கும். ஆகவே, இப்பிரச்ச னையில் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி அநியாய வரி உயர்வை குறைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.  கோவை மாநகராட்சியின் சொத்து வரி உயர்வு சொந்த வீட்டுக் காரர்களையும், வாடகை உயர்வால் குடியிருப்போர்களையும் கடுமை யாக பாதிக்கும். ஏற்கனவே ஜிஎஸ்டி  போன்ற வரிவிதிப்பால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தற் போது தமிழகத்தின் தலைநகரான சென்னையைவிட கூடுதலான சொத்துவரி என்பது சிறு குறு தொழில் களை கடும் நெருக்கடியில் தள்ளும் பேரபாயம் உள்ளது. ஆகவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு வரி உயர்வை குறைக்க வேண்டும் என் பது அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.