கோவை, ஜூன் 17– கோவை ஜீவா நகரில் வசிக் கும் ஏழை, எளிய மக்களின் குடி யிருப்புகளைக் காலி செய்ய வேண் டும் என்பதற்காக மின் இணைப் பைத்துண்டிப்பதாக அச்சுறுத்தும் கோவை மாநகராட்சியால் பாதிக் கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். கோவை - மேட்டுப்பாளையம் சாலை அருகே உள்ள ஜீவா நகரில் கடந்த 40 ஆண்டுகளாக 500-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின் றனர். கடந்த 1988-ஆம் ஆண்டு குடிசை மாற்று வாரியம் ஜீவா நகர் பகுதியை தத்தெடுத்து ஓட்டு வீடு கள் கட்டுவதற்கு கடன் வழங்கி யுள்ளது. இந்த நிலத்திற்கான கிரை யத்தொகை மற்றும் குத்தகை தவ ணைகளை கடந்த 30 ஆண்டு களாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், சிலர் ஜீவா நகர் அருகில் உள்ள தங்களது நிலத்திற் கான மதிப்பை உயர்த்துவதற் காக, திட்டமிட்டு தவறான தகவல் களை அளித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சாதகமான உத்தரவை பெற்றனர். இதனையடுத்து இப்பகுதியில் இருப்பவர்களை காலி செய்ய நிர் பந்தித்து மாநகராட்சி மற்றும் நகர மைப்பு துறையினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருகின்றனர். ஆனால் ஜீவா நகரில் வசிக்கும் 204 பேருக் கும் இருக்கின்ற இடத்தைக் கிரை யம் செய்து கொடுக்க சட்டரீதி யான நடவடிக்கையைக் குடிசை மாற்று வாரியம் மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்ற னர். இந்நிலையில், அதிகாரிகள் தங்களது பகுதியில் மின் இணைப் புகளை துண்டிப்பதாக அச்சுறுத்து வதும், வசிப்பிடத்தைக் காலி செய்யச் சொல்லி அதிகாரிகள் தொடர்ந்து வற்புறுத்துவதாகவும், இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் எனக்கூறி திங்க ளன்று பள்ளி குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு அளித்தனர். அப் போது தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணை பொதுச்செயலாளர் யு.கே.சிவஞா னம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் நிர்வாகி அஸ்ரப்அலி ஆகி யோர் உடனிருந்தனர். முன்னதாக கடந்த சில நாட் களுக்கு முன்பு கோவை மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் இப்பகுதியினர் மறு உத்தரவை நீதிமன்றத்தில் இருந்து பெறும்வரை கால அவ காசம் அளிக்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். இதனை மாவட்ட ஆட்சியரும் ஏற்று உறுதி யளித்தார். இந்நிலையில் கோவை மாநக ராட்சி நிர்வாகம் மின் இணைப்பை துண்டிப்பதாக அச்சுறுத்துவது அப்பகுதியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.