கோவை, அக். 28 – கோவை மாநகராட்சிக்குட் பட்ட பகுதியில் கோடிக்கணக்கான ரூபாய் சொத்து வரி கட்டாத பிரபல நிறுவனங்கள் உட்பட 100 பேரின் பட்டியலை கோவை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் ஏராள மான தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் இயங்கி வருகின்றன. இதில் பெரும் பாலான நிறுவனங்கள் முறையாக சொத்து வரி உள்ளிட்டவைகளை செலுத்தாமல் இழுத்தடித்து வருகின் றன. சாதராண ஏழை, எளிய மக்கள் தங்களின் வீடுகளுக்கு சொத்து வரி செலுத்த தாமதமானால் உடன டியாக குடிநீர் இணைப்பு துண்டிப்பு, மின் இணைப்பு துண்டிப்பு போன்ற நடவடிக்கைகளை மாநக ராட்சி அதிகாரிகள் மேற்கொள்கின் றனர். ஆனால், இவ்வாறு கோடிக்க ணக்கான ரூபாய் வரை சொத்து வரி கட்டாத பிரபல நிறுவனங்களை கோவை மாநகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை என தொடர்ந்து சமூக ஆர்வலர்கள் குற் றம்சாட்டி வந்தனர். இந்நிலையில், கோவையில் சொத்து வரி செலுத்த தவறிய, நிலுவை தொகை அதிகமாக வைத் திருக்கும் 100 நிறுவனங்களின் பட்டியலை கோவை மாநகராட்சி நிர்வாகம் அதிரடியாக வெளியிட் டுள்ளது. இதில், எஸ்.என்.ஆர்.சன்ஸ் குழுமம் 3 கோடியே 21 லட்சத்து 88 ஆயிரத்து 178 ரூபா யும், பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரி நிர்வாகம் ஒரு கோடியே 50 லட்சத்து 49 ஆயிரத்து 174 ரூபாய், வி.எல்.பி கல்வி குழுமம் 1 கோடியே 16 லட்சத்து 80 ஆயிரத்து 467 ரூபாயும் சொத்து வரி செலுத்த வில்லை என தெரிவிக்கப்பட்டுள் ளது.
இதேபோல், கோவையில் உள்ள பிரபல கல்வி நிறுவனங்க ளான ஹிந்துஸ்தான் கல்லூரி, என்.ஜி.பி கல்லூரி, பி.எஸ்.ஜி கிருஷ் ணம்மாள் மகளிர் கல்லூரி, அவிலா கான்வென்ட் பள்ளி, பாரதிய வித்யா பவன் பள்ளி, அமிர்தா வித்யாலயம் பள்ளி, கே.ஜி.ஐ.எஸ்.எல் டிரஸ்ட் உட்பட பிரபல நிறுவனங்கள் கோடிக்கணக்கான ரூபாய் கோவை மாநகராட்சிக்கு சொத்து வரியாக பாக்கி வைத்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும், சொத்துவரி செலுத்த தவறியவர்களுக்கு குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும், மாநகராட்சி விதிப்படி ஜப்தி நடவடிக்கையும் எடுக்கப் படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை யால் சொத்துவரி செலுத்தாமல் காலதாமதம் ஏற்படுத்தி வந்த நிறுவ னங்கள் கலக்கம் அடைந்துள்ளன.